பண்டைய காலம் முதலே நீர்நிலைகளை உருவாக்குவதும், வழிப்போக்கர்களுக்கும் விலங்குகளுக்கும் உதவும் கட்டமைப்புகளை அமைப்பதும் பெரும் அறமாகக் கருதப்பட்டது. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில், தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான உரிமை என்ற எண்ணமே சமூகத்தின் வாழ்வியல் நெறியாக இருந்தது. அதனால்தான் குளங்கள், கிணறுகள், ஊரணிகள், ஏரிகள் மட்டுமன்றி சிறிய அளவிலான கேணிகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டன.
