Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நீர் சிகிச்சை....

8 comments
இரவு படுக்க போகும்முன் உங்க பக்கத்துல பொத்தல்ல கொஞ்சம் தண்ணீர் வைச்சுகிட்டு படுங்க. காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த தண்ணீர முடிந்தவரை குடிச்சுட்டு பின்பு உங்கள் வேலையை துவக்குங்கள். தண்ணீர் குடித்து ஒரு மணிநேரம் முடிந்து, உங்கள காலை உணவை சாப்புடுங்க. டி,காபி குடிக்கலாம்.
முதல் நாள் கண்டிப்பாக 250 ML தண்ணீர் (1/4) லிட்டர் குடிக்க முடியாது. சில பேருக்கு வாந்தி கூட வரலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவை அதிகபடுத்துங்கள்.

முதல் பத்து நாள் முடிந்தவரை குடிச்சுட்டு வைச்சுருங்க. இந்த அளவு குடிக்கணும்ன்னு இல்லாம, முடிந்த வரை குடித்தால் போதும். அடுத்த பத்து நாள் கொஞ்சம் அதிகபடுத்துங்கள். இப்படியே ஒரு மாத்தில் தினம் காலையில் 1 லிட்டர் குடிக்க துவங்குங்கள்.இதற்க்கு பெயர் தான் ஜப்பானில்  "WaterTherapy". ஜப்பானில் இது மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அவர்கள் சுறுசுறுப்புக்கு, அவர்கள்  முகத்தில் தவழும் ஒரு வகையான அமைதிக்கும் இந்த வாட்டர் தெரபிதான் காரணமாம். இந்தியாவிலும் இது வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதில்லை என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

சரி இப்படி தினம் தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன????

தலைவலி 
உடல் வலி
Heart அமைப்பு நோய்கள் 
ஜீரண மண்டலம் நோய்கள் 
Arthiritis
வேகமான இதய துடிப்பு 
வலிப்பு 
Fatness
மூச்சுக்குழாய் அழற்சி 
ஆஸ்துமா
காசநோய்
சிறுநீரக மற்றும் சிறுநீர் நோய்கள்
இரைப்பை அழற்சி 
வயிற்றுப்போக்கு 
குவியல் 
நீரிழிவு
அனைத்து கண் நோய்கள்
மாதவிடாய் கோளாறுகள்
தொண்டை நோய்கள்



மேலே குறிப்பிட்ட எந்த நோய்களும் உங்களுக்கு வராமல் தடுகிறது இந்த Water Therapy.


Water Therapyயின் மூலம்  உயர் ரத்த அழுத்தம் 30 நாட்களிலும் ,சர்க்கரை நோய் 30 நாட்களிலும்,TB 90 நாட்களிலும் ஒரு கட்டுக்குள் வருகிறது என்று ஆய்வு சொல்கிறது. நமது தோல் சம்மந்தமான நோய்கள் வராமலும் நமது தோலை அதிக பொலிவுடனும் இருக்க செய்கிறது.எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருகிறது. தண்ணீர் தானே முயற்சி செய்து பாருங்களேன்.

நன்றி இணையம் 
அன்புடன் தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

8 comments:

  1. உண்மை தான் நீர் ஒரு மகத்தான மருந்து,

    ReplyDelete
  2. Anonymous8:23:00 pm

    nice post sanju

    ReplyDelete
  3. பச்சை தண்ணி மட்டும் தான் சஞ்சு மற்ற தண்ணி இல்லை..

    ReplyDelete
  4. @Thushaபயன்படுத்தி பயன் பெறுங்கள்

    ReplyDelete
  5. இளங்கோ ஏரம்பமூர்த்தி4:57:00 am

    இது ஒன்றும் ஜப்பான் கண்டு பிடித்த முறை என்று என்ன வேண்டாம். எமது சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன முறைதான் * காலை எழுந்தவுடன் சுத்த உதகம் அருந்தின் ஓங்கி நின்ற பித்தம் ஒழிவதன்றி தேங்கு மல மூத்திரம் தங்காது வாதாதியும் தத்தம் நிலை மன்னும் நீயும் ஆண்டு பல காண்பாய்" என்கிறார்கள் எம் தமிழ் சித்தர்கள்
    இளங்கோ ஏரம்பமூர்த்தி ஆயுர்வேத இயற்கை வைத்தியர்

    ReplyDelete
  6. @இளங்கோ ஏரம்பமூர்த்தி நன்றி ஐயா...சித்தமருத்துவம் தொடா்பான கருத்துக்களை இங்கே பதிவிடலாம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா