Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

புது யுகம் படைப்போம் ...

Leave a Comment
இந்த உலகை காக்க புது படை அமைப்போம்.. வரும் கயவரை அழித்து பாதை அமைப்போம்.. பாதையினுடு அலையாய் முன்னேறுவோம்... உலகைக் காக்க...!!


வாடா என் நண்பனே
புறப்படுவோம்
இந்த உலகத்தை நாமே
துடைத்திடுவோம்...!!

அழியா கனளகளை
அழித்துடுவோம்
வரும் கயவரை கொன்று
புதைத்துடுவோம்....!!

அனாதை இல்லை இனி
நாம் உறவாவோம்.
எம் அன்பை கொடுத்து
அடிமையாவோம்....!! 

ஊனம் ஓரு குறையல்ல
புரியவைப்போம்.
அது வாழ்வில் தடையல்ல
உணரவைப்போம்......!!

சாதி மத பேதம்
சுட்டெரிப்போம்..
இனி ஓரு பாரதியாய்
உருவெடுப்போம்....!!

வானுக்கும் மண்ணுக்கும்
பாதை அமைப்போம்..
தடைகளை வைத்து
படியாய் கட்டுவோம்...!!

தமிழர் எம் கலாச்சாரம்
காத்திடுவோம்..
மேல் நாட்டு மோகத்தை
விட்டெறிவோம்...!! 

பெண்களை கண்களாய்
பாத்திடுவோம்...
அடங்க மறுத்தால்
நாமே அடக்கிடுவோம்...!!

நீதிக்காய் என்றும்
குரல் கொடுப்போம்..
நீதி கிடைக்காவிட்டால்
நீதிபதி ஆகிடுவோம்...!!
வார்தையால் எல்லாம்
கூறிடுவோம்......

கேக்க மறுத்தால்.......

ஆயுதம் எடுத்திடுவோம்
உலகைக் காத்து
புது யுகம் படைக்க .....!!

தமிழ்நிலா 
காற்றுவெளி January 2014
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா