Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
எனக்கு குளம் விருப்பம், பார்க்கையில் நன்றாக இருக்கும், ஆனால் பயம் ஒன்று இருந்துகொண்டே இருக்கும், தாமரையோ இல்ல ஐதரில்லா தாவரத்தையோ புடுங்க போனவை தாமரை கொடியில சிக்குபட்டு காணாமல் போயிருக்கினம், தூர்வாராம இருக்கும் குளத்தின் சகதிக்குள் புதைந்திருக்கினம், முதலை இழுத்திட்டுதாம் என்ற கதையோ வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பம். ஆனாலும் குளத்தைப்பார்க்க பார்க்க ஆசை வந்திருக்கவேணும்.

"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்"

"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது"

"சூலவைரவா சுழட்டி குத்தடா"

"இராக்கொடிக்கு விடோணும், விண் கட்டணும்"


இப்படி தான் நிரம்பி இருக்கும் ஊரில் இந்த நேரத்துக் கதைகள்.


90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப்ப பொருளாதார நெருக்கடி, பாதை பூட்டு, சாமானுகளும் விலை, தட்டுப்பாடு.  அதனால அம்மாவின் தாலி வித்துத்தான் பால்பக்கட் வாங்கினது எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.

முந்தி காய்ச்சல் வாறது எண்டுறது சர்வசாதாரணம், எக்ஸாம் வருது எண்டாலோ அல்லது மாணவர் மன்றத்தில ஏதும் செய்யவேணும் எண்டாலோ கூடவே காய்ச்சலும் வரும். பள்ளிக்கூடத்தில காய்ச்சல் வரப்பண்ணவே ஐடியா எல்லாம் போட்டிருக்கிறம். ஏன் எண்டால் அம்மா தொட்டுப்பாக்கும் போது சுடவேணும்.


இந்த வாழ்கை எப்படி ஆரம்பித்தது என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எப்படி முடியப்போகின்றது என்றும் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஆக எமக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.


உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், 
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, 
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், 
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.

காதலின் பரிசு வலிகள் தான்

காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற்களைப்போல் பாசம் கிடைத்தாலே காதல் தான். இது தான் காதலா என்று வெக்க வைத்ததும் அதே காதல் தான்.

உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, கல்லூரி காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது. நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை/ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்

முட்டாள்கள் தினம் ஒவொரு வருடமும் வரும் இளைஞர் யுவதிகளின் கொண்டாட நாளாகும். ஏன் முதியவர்களுக்கும் கூட.. பல பல வேடிக்கைகள் நடக்கும் தருணம் அது. பலருக்கும் பழகிப்போன விடயங்கள் தான். "ஏமாற்றுதல் ஏமாறுதல்"  படலங்கள் தான். எவை முற்றி பகிடிவதைகள் ஆகி விட்டன. 
Previous PostOlder Posts Home