Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை வழங்கியுள்ளது. அந்த பணத்திலும் மக்கள் எவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்த்து விட்டார்கள்.

முப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மே 18 இல் போர் முடிந்ததாக அறிவித்தது அரசாங்கம். ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை அந்த யுத்தம். தமிழ் மக்களின் வாழ்வையும், வளத்தையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருந்தது அந்தப்போர்.



யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, தாவடி போன்ற இடங்களில், தென்மராட்சி மட்டுவில் மற்றும் வடமராட்சிகளில் உள்ள சிற்பக் கூடங்களிலும் செய்யப்படுகின்றன.

சைக்கிள் ஒரு காலத்தில் எல்லோருக்கும் இரண்டுசக்கர தேர்தான். முதல் முதலாகச் சைக்கிள் ஒடிய அனுபவம், அந்த சைக்கிளை வாங்குவதற்காகச் செய்த தில்லாலங்கடி வேலைகள், கைகளில் சைக்கிள் கிடைக்கும் அந்தநாள் மனதில் எழுந்த பூரிப்புக்கள் என்பனவும் ஒவ்வொருவருக்கும் மறக்காத நிகழ்வுகளாகவே இன்றும் ஒட்டியிருக்கும் இருக்கும்.

எங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை தரத்தில் மிகச் சிறந்ததாகவும், உறுதியாகவும் விளங்குவதுடன் அதிக இலாபமும் சம்பாதித்திருக்கின்றனர். பல இடங்களில் அவை அப்படியே இன்றும் பாவனையில் இருக்கின்றன.
அன்று போயா, அம்மா கேட்டா "பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ" என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது.

"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்"

"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது"

"சூலவைரவா சுழட்டி குத்தடா"

"இராக்கொடிக்கு விடோணும், விண் கட்டணும்"


இப்படி தான் நிரம்பி இருக்கும் ஊரில் இந்த நேரத்துக் கதைகள்.

Previous PostOlder Posts Home