Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label அமையங்கள். Show all posts
Showing posts with label அமையங்கள். Show all posts

கடந்த 2016ம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ம் திகதி இணைய வழி மூலமான கலந்துணையாடலுடன் “சிறகுகள் அமையம்” எனும் பெயர் தெரிவுசெய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் நலிவடைந்து வரும் கல்விச் சூழலை நிலைநிறுத்திப் பேணுதல் எனும் நோக்கோடு இவ் அமையம் ஆரம்பிக்கப்பட்டது. 

சிறகுகள் அமையத்தின் மகுடவாசகமாக "கல்விக்கான இலட்சியப் பயணம்" எனும் முன்மொழிவு வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டு அமைப்பின் இலட்சணை தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறகுகள் அமையம் சட்டபூர்வமாக யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதியப்பட்டது. அதன்படி சிறகுகள் அமையத்தின் பதிவு இலக்கம் NAD/DS/05/SIR/13/2017 ஆகும்.

நமக்காக நாம் அமையம் - யாழ் மாவட்டம் தென்மராட்சி சாவகச்சேரியினை தலமை அலுவலகமாக கொண்டு வடக்கு மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய ரெலோ சர்வதேசத்தின் கீழ் இயங்கும்  ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். 

கடந்த 2017 இல் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது அனைவரினையும் ஆரம்பம் முதலே கவர்ந்திருந்தது. இக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு  நிதிப்பங்களிப்பினை ரெலோ சர்வதேசம் சுவிஸ் வழங்கியிருந்தார்கள். குறிப்பாக சேகர் மற்றும் செல்வா மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னும் பல உறுப்பினர்களும்  முழு ஈடுபாட்டுடன் இயங்குகின்றார்கள். அவர்களின் சார்பாக எஸ் ஏ நிலான் அவர்கள் இலங்கையில்  பொறுப்பாளர்களாக செயற்பட்டு வருகின்றார்கள். 
Previous PostOlder Posts Home