Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மகனே நீ உறங்கு...!!

Leave a Comment
மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா