Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

என்ன இந்த வாழ்கையோ..... ?

Leave a Comment
எனக்கு வாழ்க்கை கசக்கிறது அதை சுவைக்க கவியாக்கினேன் உவர்க்கின்றது கண்ணீர் வந்து. இது எல்லாம் மாறுமா??



மேகம் இல்லா வானை கண்டேன்,
நிலவே இல்லா இரவை கண்டேன்,
மண்ணை தொடாத மழையை கண்டேன்,
கடலை சேரா நதியை கண்டேன்...!!

குரலை மறந்த குயிலை கண்டேன்,
கால்கள் இழந்த மயிலை கண்டேன்,
கூட்டை தொலைத்த குருவிகள் கண்டேன்,
வீடே இல்லா உலகினை கண்டேன்.....!!

இலைகள் அற்ற கிளைகள் கண்டேன்,
மொட்டு வராத மரத்தை கண்டேன்,
மணமே இல்லா மலரினை கண்டேன்,
விதைகள் வராத கனிகளை கண்டேன்...!!

இசையே இல்லா ஸ்வரங்கள் கண்டேன்,
தாளம் மறந்த பாட்டை கண்டேன்,
துளையே இல்லா குழல்கள் கண்டேன்,
தந்தி அறுந்த வீணையைக் கண்டேன்......!!!

தந்தையை இழந்த பிள்ளையை கண்டேன்,
பிள்ளையை பிரிந்த தாயை கண்டேன்,
கணவனை மறந்த காரிகை கண்டேன்,
கற்பை தொலைத்த பெண்களை கண்டேன்....!!

நன்றி மறந்த நண்பர்களை கண்டேன்,
ஆயுள் குறைந்த மிருகம் கண்டேன்,
புத்தகம் இல்லா நூலகம் கண்டேன்,
நீதி இல்லா சட்டத்தை கண்டேன்....!!

கத்தி திரியும் கயவர் கண்டேன்,
எட்டி உதையும் உயர்ந்தவர் கண்டேன்,
தலையே இல்லா உடல்களை கண்டேன்,
மனிதம் செத்த உயிர்களை கண்டேன்....!!

தமிழ் நிலா


காற்றுவெளி September 2010

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா