
எல்லோருக்கும் ஆசையுண்டு
எனக்கும் ஒரு ஆசையுண்டு
என் மரணம்
எனைக் கேட்டு நடக்கவேண்டும்..
என் வீட்டில்
என் கையால் தோரணம் கட்டவேண்டும்..
என் செலவில்
என் உடல் வைக்க பெட்டி வாங்கவேண்டும்
எனக்காய் நானே அழவேண்டும்...
என் உடம்பை நானே சுமக்கவேண்டும்...
எனை நானே எரிக்க வேண்டும்..
என் வலியை நானே உணரவேண்டும்...
என் ஆசை நிறைவேறுமா.......???
தமிழ்நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா