Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****

இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****

சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****

தமிழ்நிலா


பேனா முனைகளில்
என் வலிகள்...
வலிகளில் தாகம்
இன்னும் ஒரு தடவை
மாறுமா இந்த
உலகத்தின் தலை எழுத்து ..??

இனங்கள்
மதங்கள்...
மொழிகள்,
சாதிகள்,
பேதங்கள்..
நாகரீகம்..

எத்தனை
எத்தனை

என்னால்
மாற்றமுடியவில்லை..
மடமைகளை
வளைக்க முடிந்தது
உடைக்க முடியவில்லை..

ஏனெனில்
நான் பாரதியில்லை..
இருந்தாலும்
எனக்குள் ஒரு பாரதி..

தமிழ்நிலா


காற்றுவெளி June 2012



வான புத்தகத்தில்..
எழுத்துகள் சிதறிக்கிடக்கின்றன..
நட்சத்திரங்கள்...
*****

நடுப்பக்கத்தில் வழமை போல்
சோக கவிதைகள் தான்..
அமாவசை இரவு..
*****

அட்டை பக்கத்தில்
அழகான தேவதையின் முகம் ..
நிலா...
*****

கவிதைகள் எழுதும்
முன்னுரை
அதிகாலைப்பொழுது..
*****

நீண்டு கொண்டு போகும்
ஏழு வரி கவிதை..
வானவில்...
*****

சின்ன சின்ன ஹைகூக்களின்
அணிவகுப்பு..
வெண் மேகங்கள்..
*****

இதோ கவிதைகளின் காதலன்
வருகிறான்..
சூரியன்..
*****

தமிழ்நிலா 13.02.2014
Next PostNewer Posts Previous PostOlder Posts Home