துளிர்களிங்கு கருகிட பிறப்பதில்லை
வேர்களில் இருந்து வலிகளை கடந்து
துளிர் ஒன்று வருகையில் அவை
கருகிட நினைப்பதில்லை...
விடிந்திடும் பொழுதுகள்
விடியலை தேடி அலைவதில்லை...
பூமியின் மேலே பூக்கின்ற பூக்கள்
சாவதை நினைத்து பூப்பதில்லை...
விதைகள் துளிர்விட நினைத்தாலும்
விருட்சங்கள் அதை ஏழ விடுவதில்லை
கைகளை கவிழ்த்து பிடித்தாலும்
தீ என்றும் கவிழ்ந்து எரிவதில்லை...
இருட்டுக்குள் உறங்கிடும் பௌர்ணமியும்
வெளிச்சத்தை தர நினைப்பதுண்டு..
காற்றில் அசையும் புல்வெளியும்
நிமிர்ந்து தான் நிக்க நினைப்பதுண்டு...
புன்னகையை என் திருடவிட்டாய்...
இறைவனின் கோபத்தை திருடிக்கொண்டாய்...
பூக்களின் மென்மையை அடக்கிவிட்டாய்,
ஈக்களின் நிலையினை அடைந்துவிட்டாய்..
தொலையாத ஹைகூக்கள்
தொகையாக கவியாகும்
தொலைதூர நிலவுகள்
உன் வீட்டில் ஒளியாகும்...
உனக்கான ஓர் உலகம்
ஒரு நாளில் உருவாகும்.
போராடு உன் தலை எழுத்தை நீ மாற்ற..
போராடு உன் உலகை நீ மாற்று...