Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

என் தேநீர்ப்பொழுதுகள்

அம்மாவுடனும் தேநீருடனுமே
தொடங்குகின்றன என்
காலைகள் எல்லாமே..
என் காலைகளில் என்றுமே
தேநீர் இல்லாமலும் இல்லை..

வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் கொண்டு
குவளை நிறைக்கவில்லை 
என் தேனீர்ப் பொழுதுகள்...

அன்பும், காதலும் 
அறிவும் அக்கறையும் கொண்டு 
நிரம்பியிருக்கும்..
என் தேநீர்க்கோப்பை
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...

சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..

அதிக யன்னலோர 
தென்றல் பொழுதுகளை...
தேடிப்பெற்ற மழைநேர 
சாரல் பொழுதுகளை...
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..

ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...

தமிழ்நிலா

எனக்கானவை எல்லாம்
உன்னிடம் இருந்து
கிடைக்கப்பெற்றவை..
என்னிடம் இருந்தும் சிலவற்றை
நீ எடுத்திருக்கிறாய்..
வேண்டியதை எடுத்து
தேவையற்றதை
தந்தும் இருக்கிறாய்..

எடுக்கப்பட்டவை...
கிடைத்தவை இரண்டும்
நீ இருப்பதும்,
இல்லாது இருப்பதும் போலத்தான்..
தேவையின் போது இல்லாமலும்,
இல்லாதபோது தேவையாகவும்..
எப்போதும்...
எப்படியாயினும்...

ஒரு விசை
இயக்கம்...
ஓய்வு...
நூறின் ஒற்றை விளக்கம்...
அத்தனையும் ஒன்றில் அடக்கம்..
அந்த ஒன்று...??
தெளிவான குழப்பம்...

ஆச்சரியமான பூமியில்
கேள்விக்குறியுடன்
நானாக நான்
நீயாக நீ..
சில விளங்க முடியாத உண்மைகள்..
நீயாக முயலும் சில நான்களுடன் காலம்

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home