Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

01

ஆரம்பத்தில் எல்லாமே
ஒளியாக தான்..
மங்க தொடங்கியது
மனங்களை போல்..

கொஞ்சம் கொஞ்சம் தின்றது..
பிடித்துபோக..
கொஞ்சம் கூட தின்றது..
இப்போ எல்லாமே..

அத்தனையும்   ஸ்தம்பிதம்
இருளானபோது..

எச்சங்கள் மட்டும் மிச்சம்..
அப்பப்போ மின்னிக்கொள்ளும்..
சில மனிதங்கள் போல..

ஆன்மா தின்று செரித்து சிரித்து
அண்டம் தின்ன தொடங்கிற்று..
எமக்குள் இருந்து
எம்மை கௌவும்
ஒவ்வொன்றும்  எல்லாமும்..

------

02

இது இருள்யுகத்தின்
எதிர்காலம்...
கலியுக இறுதியின் பின்னான
முதல் நாள்...

மின்மினிகளிடம்
கடன் வாங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
இருள் தின்னத்தொடங்கியது ஒளி..

மீண்டும் துளிர்கள்
மீண்டும் இலைகள்
மனிதம் தழைத்திருந்தது..
மனங்களில் தெரிந்தது..

அண்டம் சிரித்தது..
ஆணவம் அழிந்திருந்தது
இருள் ஊழிக்காலத்தில் நீந்தியது...

ஆக்கிரமித்து ஓளி..
எமக்குள் இருந்து
எம்மை தின்னும்
ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும்...

தமிழ்நிலா

காற்றுவெளி October 2013
Next PostNewer Posts Previous PostOlder Posts Home