Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


நடந்து போகையில்
கடந்திருந்தது ஒரு கல்..
அழைத்தது
கடவுளின் எச்சம் என்றது..

கல் எடுத்து சிலைவடித்து..
கருவறையில் சிறையிலிட்டு
கடவுள் என்று சொல்லிட்ட
கல்லின் எச்சம் அது...



காதல்
எப்போதும்,
எப்படி வேண்டுமானாலும்...
யார்மேலும்,
எதன் மேலும்....
எப்படியோ வந்துவிடுகிறது..

வலிகளை  பொறுக்கும் தாய்க்கு
வெளிவரும் குழந்தை மேல் காதல்...
பால் மணம் மாறா குழந்தையின்
கன்னக்குழி மேல் எனக்குக் காதல்...

Next PostNewer Posts Previous PostOlder Posts Home