Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
"மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை,
எங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,"
நாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து இஸ்லாம் பிரச்சனையும் அல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு முஸ்லீம் நண்பனாக இருப்பான், ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ஒரு நல்ல தமிழ் நண்பன் இருப்பான். ஆக,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இலட்சங்களுக்கு மேல் இருந்த பனைகள், உள் நாட்டுப் போர், கட்டடங்கள், வீடுகளின் பெருக்கங்கள், மின் வசதிகள், வீதி அகலிப்புகள் காரணமாக, செயற்கையாகவும், இயற்கையாகவும் அழிந்து 20 இலட்சங்களை அண்மித்துவிட்டது.

என்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதையுங்கோ, இது எங்களுடைய பாரம்பரிய, நாங்கள் மறந்த விளையாட்டு ஒன்றைப் பற்றின கதை தான் இது.
யாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே இன்னும் அழியாது பேணப்படுகின்றது, அல்லது கொண்டாடப்படுகிறது. அதை இன்று வரை பேணிக்காக்கும் சமுதாயம் அருகிக்கொண்டு கொண்டு சென்றாலும், அந்த பழமையை கொண்டாடும் சமூகமும் எங்களுக்குள் இன்னமும் இருக்கவே செய்கிறது.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home