முந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் "லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் " எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இடமும் தான். அப்ப உந்த சண்டை நேரம் கரண்ட் எப்ப நிக்கும் எண்டு தெரியாது, மாறி மாறி ட்ரான்ஸ்போமெருக்கு அடி விழுறதால திடீர் எண்டு கரண்ட் நிக்கும். அதனால அந்தக் காலத்தில் மின்சாரம் மீது முழு நம்பிக்கை வைக்காமல் மண்ணெண்னை அரிக்கேன் லாம்பினை அருகில் வைத்துக் கொள்ளுவார்கள்.