Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மறைந்துவரும் வீர விளையாட்டுக்களில் இன்னும் மறக்கப்படாத, அழிந்துவிடாத ஒரு விளையாட்டு மாட்டுவண்டிச் சவாரி. இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும், எமது வீர விளையாட்டானது இன்னமும் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில், வடமாகாணத்தின் சில மாவட்டங்களில்  துடிப்போடு நடைபெறுவது ஓரளவு ஆறுதலான விடயம்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான நகரின் பிரதான வீதியோரங்களில் நிறைந்து காணப்படுபவை பாதீனியம். அழிக்க வேண்டும் என்று அனேகர் விரும்பியும், பலர் அழிக்க முயன்றும், அழித்தும்  இன்னும் அழியாது நிற்கும் இந்த பாதீனியங்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.

முந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் "லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் " எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இடமும் தான். அப்ப உந்த சண்டை நேரம் கரண்ட் எப்ப நிக்கும் எண்டு தெரியாது, மாறி மாறி ட்ரான்ஸ்போமெருக்கு அடி விழுறதால திடீர் எண்டு கரண்ட் நிக்கும். அதனால அந்தக் காலத்தில் மின்சாரம் மீது முழு நம்பிக்கை வைக்காமல் மண்ணெண்னை அரிக்கேன் லாம்பினை அருகில் வைத்துக் கொள்ளுவார்கள்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home