யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, தாவடி போன்ற இடங்களில், தென்மராட்சி மட்டுவில் மற்றும் வடமராட்சிகளில் உள்ள சிற்பக் கூடங்களிலும் செய்யப்படுகின்றன.