எனக்கு குளம் விருப்பம், பார்க்கையில் நன்றாக இருக்கும், ஆனால் பயம் ஒன்று இருந்துகொண்டே இருக்கும், தாமரையோ இல்ல ஐதரில்லா தாவரத்தையோ புடுங்க போனவை தாமரை கொடியில சிக்குபட்டு காணாமல் போயிருக்கினம், தூர்வாராம இருக்கும் குளத்தின் சகதிக்குள் புதைந்திருக்கினம், முதலை இழுத்திட்டுதாம் என்ற கதையோ வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பம். ஆனாலும் குளத்தைப்பார்க்க பார்க்க ஆசை வந்திருக்கவேணும்.
.png)