Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010
A9 வீதி திறக்கப்பட்ட பின்பு தம் ஊர்களுக்கு வந்து போகும் சொந்தங்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த சிறு துளி...



A9 வீதியால யாழ்ப்பாணம்
போப்போறம்....
அப்பா அம்மா காலத்தில
யாழ்தேவில வந்து போனம்...

செம் மண் வாசனை சொல்லுது
ஊருக்கு போறோம் எண்டு...
பனை ஓலை காற்று சொல்லுது...
யாழ்ப்பாணம் போறோம் எண்டு...

முகமாலை தொடக்கம்...
யாழ்ப்பாணம் வரை அப்போ
நம்ம சொந்தம்.... இது தானே
இப்போ நான் வாழும் சொர்க்கம்...

பனங்காய் பணியாரமும்,
பருத்தித்துறை வடையும்
நினைத்தாலே இனிக்கும்
சுவை வாயில் ஊறும்....
மீசாலை மாம்பழத்துக்கும்
கொக்குவில் கொய்யக்கும்
அடிபட்ட காலம் இப்ப கூட
நினைவிருக்கு....

மட்டுவில் கத்தரிக்காய் வாங்க
சாவகச்சேரி போட்டுவந்து,
அச்சுவேலி சந்தையில
ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு..
மண்டான் சுருட்டடிக்க
தொண்டமனாறு போனகதை
சொல்லாமை மறைப்பேனா....

தட்டிவான் ஏறி வல்லிபுரம்
போகையில... காசு வாங்க
கிழவன் வர இடைல றங்கி
ஓடினதையும்.....
நல்லூர் திருவிழாக்கு
அடிக்கடி போனதையும், அங்கு
வந்த பெண்களுக்கு செல்லமாய்
இடிச்சதையும்...
மறக்க தான் முடியுமா??

எங்கள் சொர்க்கம் என்றும்
பச்சையாய் தான் இருக்கும்.
ஒழுங்கை எங்கும் சின்ன சின்ன
காதல்களும் நடக்கும்......
காதல் பெண்ணை பாக்க வேண்டி
பள்ளியில தவம் இருப்போம்...
பள்ளிக்கூடம் விட்டா காணும்
சைக்கிள்ள பறந்திடுவோம்...

யாழ்ப்பாணம் போறதெண்டால்
யாருக்கு தான் கஷ்டம்...
நான் யாழ்ப்பாணம் போறன்
என் வாழ்வை தொடர... .

தமிழ் நிலா

காற்றுவெளி july 2010



என் கனவே
சருகாக கலைந்ததேனோ..
விதியே..
என் ஆசைகள் கொன்று
புதைத்ததெங்கே..
நிழலே
நீ நிஜமாகி வந்ததென்ன..
நிலவே
தடுமாறி போனதெங்கே..

போட்டியே இல்லாமல்
தோற்று போகிறேன்..
போகும் இடம் எல்லாம்
வெக்கி சாகிறேன்...

காலமே....

கற்பனையை விட்டு
நெஞ்சை களவாடி
போனதேனோ..
புன்னகையை தீமூட்டி
புல்லாங்குழலை
நீ தந்துவிட்டாய்...

இறைவா..
பூக்காத மரமானேன்- என்
பூமி மட்டும் மண் ஆனதே...

கல்லே உன்னை கடவுள் என்றதார்..?
உயிரே உனக்கெனி இந்த உடல்ஏனோ...?
தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...


நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர் 
மழையில் நனைகிறேன்..

வீதியில் போகையில் 
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க 
குனிந்து தான் போகிறேன்...

பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....

புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....

ஒரு முறை தோற்றால் 
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...

பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!

நண்பர்கள் நிறைந்த 
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....

 பட்டம் பெற்றோர் 
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து 
பிளைகிறேன் தினம் தினமே..

என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு 
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது 
என் வாழ்க்கையுமே.....

தமிழ்நிலா 
பெண்கள் ஏமாறுகின்றார்களா இல்லை ஏமாற்றப்படுகின்றார்களா தெரியவில்லை... காதல் எனும் வார்த்தையின் வலிமையால் வதைக்கப்படுகின்றார்கள்... பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் மிதக்கவிட்டான்...!!
உயிருக்குள் உயிரை
வைத்த கடவுள்
எனை கண்ணீரில் மிதக்கவிட்டான்...!!!

நெஞ்ச்சோடு சுமக்கும்
அவன் நினைவும்...
வயிற்றோடு சுமக்கும்
அவன் உயிரும்....
எனை கொல்லுதடி
சமுகம் கூட ஒதுக்கி விட்டதால்...

உலகத்தில் உயிரை
படைத்த கடவுள்....
உயிருக்குள் ஆசையை
வைத்தான்...மறக்காமல்
காதலையும் வைத்தான்...
காதலில் காமத்தையும்
வைத்து விட்டான் அவன்.....!!
எனை வீதியில் விட்டுவிட்டான்...

காதல் எனும் வார்த்தையில்
காமத்தையும் புதைத்து...
பெண்களிடம் குளிர்காயும்
இவன் போல் காமுகர்களை
பெண்ணினமே ... விரட்டிவிடு....
உன்னையும் அணுகலாம்...
ஒரு வினாடிக்கு ஒரு தடவை
என்றாலும் சிந்தி....

அபலை என் கால்களோ
வாழ்வை முடிக்க நடக்கிறது...!!
எம் காதலின் சின்னமோ..
வாழ்வை தொடர கால்களால்
உதைக்கிறது....!!!!!

இந்த உலகத்தை புரியாமல் ........!! !

தமிழ்நிலா 
தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள் ஊரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று.


ன்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!

கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...

யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...

தமிழ்நிலா 


காதல் காதலாக இல்லை, திருமணமான பின்னும் காதல். அது வேறு பெண்ணுடன். மணமாக முன்னும் காதல். சிறு வயதில் தாயாகும் பெண்கள்.. தற்கொலை செய்யும் பெற்றோர்... பல்வேறு நிகழ்வுகளால் எழுதிய உளறல்....





தாஜ் மகாலால் காதல் வாழ்கிறது
இங்கு காதலோ காமத்தில்
ஏரிகின்றது..... 


இது ஏன் ....???
இது காதலில் குளிர் காய்தலோ...!!

ஒழுங்கைக்கு ஒழுங்கை கட்டப்படுகிறது
நவீன தாஜ்  மகால்கள்.. இன்றய எம்
சாஐகான்களால்... 


இது ஏன் ....??
காதலின் நினைவுக்கோ....!!

காதலுக்கும் ஓராடாண்டாம் - அவர் தம்
குழந்தைக்கும் ஓராண்டாம்.. இது 
ஏன்ன மாயம்.... 


இது ஏன் ..??
காதலின் வேகமோ....??

முப்பது வயதாகியும் கன்னிகளாய்
பல பெண்கள்... பதினைந்து வயதிலே
கற்பிணிகளாய் சில பெண்கள்..


இது ஏன்....??
காதலின் சூதோ...??

கழுத்தில் தாலி இல்லை
வயித்தில் பிள்ளையாம்... 
இருக்கவீடில்லை.. 
அப்பனையே தெரியாமல்
பிறந்துதாம் பெண் பிள்ளை....!!

பள்ளிக்காதல், படலைக் காதல், 
சந்திக் காதல், சந்தித்த காதல்
கள்ள காதல், செல்லில் காதல் எல்லாம்
வர நம் நல்ல காதல் என்னாவது.....??

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home