Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
புத்தாண்டில் ஒரு சிறுமியின்..கனவாக...


புதுமைகள் புரிய 
வந்த புத்தாண்டே..
உன் புதுமைகள் என்ன 
சொல்லாண்டே..

இரவினில் பிறக்கிறாய்..
உன் பிறந்தநாள்...1.1.11 
அட இது கூட புதுமை எல்லோ
உன் பிறப்பே புதுமை ஆச்சே

இங்கே சமாதானத்தை
தந்திடு.. நீ
புதுமையை ஒன்றொன்றாய் 
காட்டிடு..
அன்பை எங்கும் 
பரப்பிடு,
ஆணவ அலைகளை
அடக்கிடு,
துன்ப மலைகளை
உடைத்திடு,
கருணை மழையினை
பொழிந்திடு..

உயர்ந்தவர் புகழினை
இறக்கதே..
ஏழைகள் வயிற்றில் 
அடிக்காதே..
நண்பரை நீ
பிரிக்காதே..
நன்றியை என்றும் 
மறவாதே..
ஆயுள் ரேகையை
அழிக்காதே...
விலைகளை தினமும்
கூட்டாதே..

எங்கும் எதிலும் காதல் 
கொண்டு....உன்
புதுமைகள் அனைத்தையும்
புரிந்துடு......

தமிழ் நிலா 
எத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால வடுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது. 


னை மரத்தோப்பே...
பழகிய தெருவே சுகமா....
பச்சை சொர்க்கமே,
பனி விழும் பூவே நலமா...
மீண்டுவந்தேன் மீளவும்
நான் அம்மா....கையிழந்த 
தனி மரமா....!!!

நேற்றிருந்தோம் வீட்டினிலே...
சேர்ந்திருந்தோம் முற்றத்திலே...
விழித்திருந்தோம் இரவினிலே...
விடியும் முன்னே தனித்துவிட்டோம்
இரு உயிரை பிரிந்துவிட்டோம்....!!

இடம்தேடி நாம் நடந்து 
கால் தளர்ந்து போகையிலே...
கோயில் மடம் இருக்கு 
இளைப்பாற போய் இருக்க,
விழுந்தகுண்டிநிலே நாலுயிரை
அம்மனுக்கு பலி கொடுத்தோம்...!!

விடியம் இரவென்று காத்திருக்க
காட்டு நரிக்கூட்டம் கட்டவிழ்து
வருதென்று.. கால் போகும் இடம்
எங்கும் கையாலே தான் போனோம்...!!

பூச்சிக்கும் புல்லுக்குமம் மருந்தடிக்க
அஞ்சியோடும் எம் குழந்தைகளுக்கு
நச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை
கண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..

பாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி
கட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று
சதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை
இன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....???

தமிழ்நிலா

காற்றுவெளி December 2010
தனங்களப்பு எனும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்.. இரண்டுபேர் கொல்லப்பட்டும், 3 பேர் காயமும் அடைந்தார்கள்... அந்த குடும்பத்தின் அழுகை வானை பிழந்து மழையை வரவைத்ததோ இல்லையோ. ஏன் மனதினை பிழந்து கண்ணீரை பொழிய விட்டது...


ரணியில் நாம் வாழ
தரையினிலே வைச்சோம்
வலது காலை வைக்க முன்னம்
வைச்ச காலை காணலயே..!!

கழனியில காலை வச்சோம்
எம் குலம் நீண்டு வாழ....
கால் போக தான் தெரிஞ்சுது
கண்ணியில வைச்சோம் என்று...!!

வைச்சவனும் தப்பிட்டான்
வந்தவனும் தப்பிட்டான்...
சண்டை முடிஞ்சுது எண்டு போன
சொந்தம் தான் செத்திச்சு...!!

குருதியில நான் கிடந்தேன்
அண்ணன் காலை காணலயே...
கட்டி பிடிச்சு அழுவம் எண்டா
உடம்பில உசிரும் இல்லை....!!

தமிழ் நிலா 
வஞ்சம் தீர்க்கப்பட்ட வன்னி மக்களின் இன்றய நிலை... மீள திரும்பாத மாணவர் மனநிலைகள்... எதிர்காலம் எரிக்கப்பட்ட இளஞர் யுவதிகள்... 



றப்பதற்கு சிறகிருந்தும்
நுடக்க முடியா எம் உறவுகள்
சத்தம் ஒன்று கேட்டாலே
பறந்து போகும் குருவிகள்... இது
ஏனோ தெரியவில்லை...!!

தினம் எண்ணி எண்ணி
செத்துப்போகும் இளசுகள்..
பெரும் காடாய் போன
தமிழ் பள்ளிகள்....
பள்ளி செல்ல முடியா
சிறிசுகள்... இது தான் எம்
சாபமோ தெரியவில்லை...!!

புத்தகம் இல்லா பைகளும்
மையே இல்லா பேனைகளும்
இரத்தம் படிந்த சீருடைகளும்
இது தான் இனி வாழ்கையோ
ஏனக்கு தெரியவில்லை...!!

கதிரைகள் இல்லா மேசைகளும்
மேசைகள் இல்லா கதிரைகளும்
தரையே கதிரையாய் மாறும்
சில நேரங்களும்... இது விதியா
அல்ல சதியா ஒன்றும் தெரியவில்லை..!!

கொட்டில்கள் இனி வகுப்பாய் போக
கைகள் இனி கால்களாய் போக
சோதனையில் வாடும் எம்மை
சோதனைகளும் விடவில்லை...
காரணமும் தெரியவில்லை...!!

பேய்க்காட்டும் பொய் கோலம் 
நிவாரணமும்... எம் 
பிள்ளைகள் பசியால்
சதா ரணமும்.. இது எல்லாம்
எவனுக்கோ சாதாரணமாய்
போனது ஏனோ தெரியவில்லை....!!

தமிழ்நிலா 

காற்றுவெளி November 2010

சுகமான சுமைகள் எல்லாம்
சுமக்கின்ற சுமைதாங்கி
சாயாமல் சாய்ந்திருக்கும்,
சகபாடி சகவாசம்...
ஒரு நொடி தாண்டி போகயில
நடிப்பாகி போனதனால்

உயிரான உறவெல்லாம்
வெறும் வேசமாக
தெரிந்ததனால்,
கரை சேரா படகொன்று
கவிழ்ந்தது நடு கடலினிலே.
உருவான நாள் முதலாய்
உருகாத நட்பொன்று
உடைந்தது இன்று தரணியிலே.............!!


தமிழ் நிலா 


கடத்தப்பட்டு, காணாமல் போய் கைது செய்யப்பட்ட, சிறைகளிலும் தடுப்பு முகாங்களிலும் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் விடுதலை என்று அறிவிக்கப்பட்ட மகிழ்சியில்...




என் பாசமுள்ள அம்மாவுக்கு
ஒரு பாச மடல்.......
அம்மா நலமா?

யாழ்ப்பாணம் பார்த்து
ஐயிரண்டு வருடம் அம்மா...!!
இங்கு வரும் பேப்பர் எலாம்
யாழ் செய்தி சொல்லும் அம்மா ... ??

தமிழினத்தை கொல்றாங்களாம்
தினம் தினம் சொல்லுறாங்கள்..
இப்பவும் நடக்குதாம்மா...
தமிழனுக்கு உரிமை கிடைச்சுதாம்மா???

A9 ம் திறந்தாச்சாம்
யாழ் தேவியும் வரப்போதாம்.....!!
யாழ்ப்பாணம் நான் வர
நீ இருக்கணும் எனக்காக.....
காணமல் போன உன் மகன்
உயிரோடு உள்ளேன் அம்மா......!!

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்தி விட்டாய்...
நாற்பது வயதுக்கு மேல் ஆகி இருக்கும்
என் அம்மா உனக்கு....

நீ பெத்த மகளுக்கு - இந்த
அண்ணனை நினைவிருக்க ..??
என் பெயர் சொல்வதுண்டா....???
அவள் கல்யாணத்துக்கு எனும்
வருவேனா சொல் அம்மா...??

கடத்தப்பட்ட காரணம் தெரியாமலே...
கடந்ததமா பத்து வருஷம்....
ஒவொரு நாளும் விடியும் போது
எங்களுக்கு விடியாத என்று
இருக்குதம்மா...!!!

பத்து வருசத்தில் எத்தனையோ
நண்பர் அம்மா...!!
வருவதும் போவதும்...
அன்றாட வழக்கம் அம்மா...!!!

போனவர்கள் இங்கு என்று
யாருக்கும் தெரியாதம்மா...!!
யாரேனும் வந்து என் செய்தி
சொன்னதுண்டா..????

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்திடம்மா...
நிச்சயம் ஒரு நாள் வருவேன்
அரசியல் கைதிகளுக்கு மறுவாழ்வாம்....!!

தமிழ்நிலா

காற்றுவெளி October 2010 

அண்மையில் பத்திரிகையில் பார்த்த செய்தி என்னை ஏதோ செய்தது.. இரு பிள்ளைகளுக்கு தாயான தான் மனைவி இன்னொருவனுடன் போவதை தடுக்க மக்கள் மத்தியில் காலில் விழுந்தாராம்... பாவாம் 



ற்றையடிப்பாதையில
ஓரமாய் போறவளே......
என் ஒற்றை மனசு கூட
உன் பின்னால போகுதடி....!!!

கன்னியே.... என் மனதை
களவாடி போனவளே......
இந்த காரிருளில்
கையில் பெட்டியுடன் நீ
களவாக போவதெங்கே.....??
உன் பின்னாலே புருஷன் வருகிறனே
ஒருதடவை பாத்தாயா...??
உன்பின்னால ஒரு உருவம் வருதென்று...
ஓரமாயேனும் பாரேண்டி.....

எங்கோ பாட்டு வர நீ 
எச பாட்டு பாடுகின்றாய்.. .
என் இதயம் இசை மீட்குதே.
சோகத்தோடு,.. அது..
காதோடு கேட்கலயா...???
 காரிருளில் என்ன சத்தம்.....??

இந்த நேரத்தில்.... இந்த பாதையில்
வருவது தான் யாரடி...?? வந்தவன்...
கைபோடுகிறான்.... ஏனடி
நீ கூச்சல் போடவில்லை....
அவன்..யாரடி... உன் கணவன் நானடி...??
தாலியை கூட காணவில்லையே....
எனை கழட்டி விட்டாயா...???
சிரிக்கின்றானே.... அவன்
உன் கண்ணாளனா......???

உன் பின்னால வந்த என் மனசு
நொருங்கிப்போனதடி....!!
என் பிள்ளைக்கு என சொல்ல..
உயிரை உறையவைத்த
ஒரு மணிக் காதலியே.....
ஒற்றையடிப்பாதையில ஒரு
குடும்பம் தான் போக......
கண்ணீரால் வாழ்தியபடி ஓரு
இதயம் தான் திரும்ப......
கலைந்து போனது...என்
வாழ்க்கயின் கனவு..!!

தமிழ் நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home