Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

முதியோர் தின நாளில்..ஒரு பெரியவரின் சுய தீர்ப்பு..


திரும்பிப்பார் மகனே..

அப்பா என கூப்பிட்ட நீ
இப்போ யாரப்பா என்கிறாய்...
உன் மனைவி வந்தபின்
யாரோ என பாக்கிறாய்..

வயிற்றில் சுமந்தாள் அன்னை,
அவளுக்கு வலிக்கவில்லை...
தோளில் தினம் சுமந்தேன்
எனக்கும் வலிக்கவில்லை...
என்னை நீ சுமக்கவில்லை..
இருந்தும் எனக்கு வலிக்குறது..

மாதாந்தம் பத்தாம் திகதி
தினம் வராதா சொல்வாயா..?
பத்தாயிரம் பென்சனுக்கு
எங்கிருந்து வருகிறது
திர்டீரென அன்பெல்லாம்..???

முதுமை வந்த பின்னல் என்
முகம் பார்த்தும் நீ உன்
முகம் திருப்பி போகையில்
துடிக்காத என் இதயமும்
நொடிக்கு இருதரம் துடிக்குதடா...

திரும்பிப்பார் மகனே..

சிறுவயதில் உன்
இரவு திருவிழாவை
ஒரு வயதில்
நான் கூற சிரித்திருக்கிறாய்...
ஒரு நாள் கட்டிலில்
போனதற்காய்
கடிந்து விழுந்தாய்..
உணர்வே இல்லாமல்
தான் போகுதடா
இது கூட புரியலையா...!!

திரும்பிப்பார் மகனே

ஆறு வயதில் ஒன்றை
அறுபதுதரம் கேட்டும்
சொல்லியிருக்கிறேன்..
ஆறு தரம் தான்
அன்பாய் கேட்டிருப்பேன்..
அறுபது வயது தான்
ஆகிறது..."உனக்கு
அறளை பேந்து விட்டது,
என்கிறாள்
உன் மனைவி..

உங்களுக்கு ஆடை
வாங்குகையில் எனக்கும்
ஒன்று வாங்குங்கள்..
குளிப்பது சிரமமாக
இருக்கிறது... அடிக்கடி
உடையையாவது
மாற்றிக்கொள்கிறேன்..

குழந்தைகள் கூட
நெருங்க மறுக்கிறாய்
முதுமை தொற்றிவிடும் என்றா?
திரும்பிப்பார் மகனே..
முன்பு எங்கள் வீட்டு
பூனையை அணைத்து
மகிழ்ந்திருக்கிறாய்
நினைவிருகிறதா...??

தொழுவத்தில்
மாடுகளுக்கு வைக்கும்
கஞ்சி கலராய் இருக்கிறது
தினம் தரும் தேநீரை விட..
சத்து உணவு கேக்கவில்லை
சாகடிக்க தந்தால் போதும்
செத்து விடுகிறேன்....
வங்கியில் காசிருக்கு..
காப்புறுதியும் செய்திருக்கு..
அது போதும் உனக்கு
சுடலை வரைக்கும்...

--------

குழந்தாய் பாவம் உங்கப்பா
தாங்கமாட்டார்..
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
மனசெல்லாம்
மெசின் ஆகிப்போனாலும்..
முதியோர் இல்லம்
நிச்சயம் இருக்கும்..
அங்கே விட்டு விடுங்கள்..
அவனாவது நிம்மதியாய்
இருக்கட்டும்..!!

தமிழ் நிலா

இன்று எமது யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில்  ஒன்று வீதி அகலிப்பு. நீண்டகாலமாக அறிவிக்கப்பட்டு வந்த  வீதியின் அகலிப்புப் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்

இணைய தளங்களில் இப்போது உதய சூரியன் கிராமம் பற்றி பிரபலமாக போடப்படுகின்றது. தலையங்கங்கள் விமர்சனமாக இருக்கின்றன. விமர்சனங்கள் விசித்திரமான உண்மைகளாக இருக்கின்றன மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் - ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்
நாட்டை குழப்பிவரும் கிரீஸ் பூதம் காரணமாக எமது யாழ் நடந்த கொடிய நிகழ்வு.


கண்ணயர நான் வந்து
கால் நீட்டி கிடக்கையிலே..
கிரீஸ் பூதம் வருதென்று
கத்திக் கேக்கையிலே 
கண்திறந்து எழுந்துவிட்டேன்..

கேற்ஆல அவர் ஓட 
ரோட்டாலே சனம் ஓட
சப்பாத்துக்கால் ஓட..
துப்பாக்கி வேடிகேக்க..
இரவெல்லாம் பகலாக 
கண் இரண்டும் அடைகாக்க
கரண்ட் நிக்கும் என 
விளக்கு எடுக்க போகையிலே..

மரம் தாவும் கிரீஸ் பூதம்
மதில் தண்டி வரக்கண்டும் 
மனதாலே பயம் கொண்டு
மங்கை நான் பதுங்கவில்லை 

வந்தவன் தமிழன் இல்லை
அவன் நெஞ்சில் ஈரம் இல்லை..
கையில் கூர் இருக்கு..
குத்திவிடும் துணிவிருக்கு...

கதவை உடச்சு கால் ஒன்று
வருகையிலே - கையில் 
விறகெடுத்து விட்டு விட்டேன்..
என் உடலை காத்து விட்டேன்..

"கண் விழித்த நேரம் முதல் 
கண்ணயரும் வேளைவரை
பிறர்க்காகவே வாழும் 
பெண்ணினமே...

எழுந்திடு.. உன்னையே 
நீ காத்திடு...!!"

தமிழ் நிலா

உலக சனத்தொகை செக்கனுக்கு செக்கன் அதிகரித்து வரும் நிலையில் எமது இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கும் வீதத்தில் இருந்தாலும் குறைவாகவே இருக்கிறது. காரணம் பிரதானமாக யுத்தம் ஒன்றே. சிறு சிறு காரணங்களாக கொலை, விபத்துகள், இயற்கை அழிவுகளை கூறலாம்.

பல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் பட்டினிச்சாவுக்குப் பலியாகின்றனவாம்.
யாழ்ப்பாணம், அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள பல ஊர்களிலும் இன்று வேள்வி என்று அழைக்கப்படும் பசு, ஆடு, கோழிபோன்ற உயிரினங்களை பலியிட்டு வழிபாடு செய்யும் முறை ஒன்று என்றும் இல்லாத அளவுக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home