Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
ஏதாவது ஒரு படம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட ஆசை, ஈழ சினிமா என்பது மிகப்பெரியது, அதில் எங்களுக்கு புரிதல்களுக்கு இடங்கள் குறைவு, எத்தனையோ ஆளுமைகள் கடந்து வந்த பாதை, இங்கிருந்து சென்று இந்திய சினிமாவில் சாதித்தவர்களும் உண்டு, அப்படியான இந்த சினிமாவில் எங்கள் உள்ளீடும் இருக்க வேண்டும் என்பது அவா,
இது நாங்கள் எடுத்த ஒரு குறும்படம் பற்றிய தகவல். இந்த காலப்பகுதியில், நடந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பில் உருவானது, இது எமது முதல் படைப்பு, இதற்கு சில விருதுகளும் கிடைத்தது. 

அப்பாவினை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருக்கலாம், அப்பா ஆரம்பத்தில் நண்பனாயும், பின் எதிரியாகும், இறுதியில் ஹீரோ ஆகவும் மாறிப்போவார். அப்பா, அம்மா சொல்லி தான் தெரியவரும், அது போல தான் அப்பா பற்றிய கதைகளும். 

என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை


சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...


நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...



உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..

இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில்  நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...

தமிழ்நிலா

உன் ஒவ்வொரு கேள்வியும்
பலவிடைகளுடனேயே ஆரம்பிக்கிறது..
இருப்பினும் உனக்காய் ஒரு கேள்வி தயார்..
Next PostNewer Posts Previous PostOlder Posts Home