அன்று போயா, அம்மா கேட்டா "பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ" என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது.
2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா எங்கள் வீட்டில் ஒரு பிரப்பம் கூடை ஒன்று இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் கூடையில் இருக்கும் துணிகளை கீழே கொட்டிவிட அவர் எண்ண ஆரம்பிப்பார்.






