சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும்.
எனக்கு குளம் விருப்பம், பார்க்கையில் நன்றாக இருக்கும், ஆனால் பயம் ஒன்று இருந்துகொண்டே இருக்கும், தாமரையோ இல்ல ஐதரில்லா தாவரத்தையோ புடுங்க போனவை தாமரை கொடியில சிக்குபட்டு காணாமல் போயிருக்கினம், தூர்வாராம இருக்கும் குளத்தின் சகதிக்குள் புதைந்திருக்கினம், முதலை இழுத்திட்டுதாம் என்ற கதையோ வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பம். ஆனாலும் குளத்தைப்பார்க்க பார்க்க ஆசை வந்திருக்கவேணும்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை வழங்கியுள்ளது. அந்த பணத்திலும் மக்கள் எவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்க்க முடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கிச் சேர்த்து விட்டார்கள்.
முப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மே 18 இல் போர் முடிந்ததாக அறிவித்தது அரசாங்கம். ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை அந்த யுத்தம். தமிழ் மக்களின் வாழ்வையும், வளத்தையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருந்தது அந்தப்போர்.
யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, தாவடி போன்ற இடங்களில், தென்மராட்சி மட்டுவில் மற்றும் வடமராட்சிகளில் உள்ள சிற்பக் கூடங்களிலும் செய்யப்படுகின்றன.



.png)


