Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...


நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர் 
மழையில் நனைகிறேன்..

வீதியில் போகையில் 
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க 
குனிந்து தான் போகிறேன்...

பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....

புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....

ஒரு முறை தோற்றால் 
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...

பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!

நண்பர்கள் நிறைந்த 
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....

 பட்டம் பெற்றோர் 
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து 
பிளைகிறேன் தினம் தினமே..

என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு 
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது 
என் வாழ்க்கையுமே.....

தமிழ்நிலா 
பெண்கள் ஏமாறுகின்றார்களா இல்லை ஏமாற்றப்படுகின்றார்களா தெரியவில்லை... காதல் எனும் வார்த்தையின் வலிமையால் வதைக்கப்படுகின்றார்கள்... பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் மிதக்கவிட்டான்...!!
உயிருக்குள் உயிரை
வைத்த கடவுள்
எனை கண்ணீரில் மிதக்கவிட்டான்...!!!

நெஞ்ச்சோடு சுமக்கும்
அவன் நினைவும்...
வயிற்றோடு சுமக்கும்
அவன் உயிரும்....
எனை கொல்லுதடி
சமுகம் கூட ஒதுக்கி விட்டதால்...

உலகத்தில் உயிரை
படைத்த கடவுள்....
உயிருக்குள் ஆசையை
வைத்தான்...மறக்காமல்
காதலையும் வைத்தான்...
காதலில் காமத்தையும்
வைத்து விட்டான் அவன்.....!!
எனை வீதியில் விட்டுவிட்டான்...

காதல் எனும் வார்த்தையில்
காமத்தையும் புதைத்து...
பெண்களிடம் குளிர்காயும்
இவன் போல் காமுகர்களை
பெண்ணினமே ... விரட்டிவிடு....
உன்னையும் அணுகலாம்...
ஒரு வினாடிக்கு ஒரு தடவை
என்றாலும் சிந்தி....

அபலை என் கால்களோ
வாழ்வை முடிக்க நடக்கிறது...!!
எம் காதலின் சின்னமோ..
வாழ்வை தொடர கால்களால்
உதைக்கிறது....!!!!!

இந்த உலகத்தை புரியாமல் ........!! !

தமிழ்நிலா 
தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள் ஊரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று.


ன்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!

கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...

யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...

தமிழ்நிலா 


காதல் காதலாக இல்லை, திருமணமான பின்னும் காதல். அது வேறு பெண்ணுடன். மணமாக முன்னும் காதல். சிறு வயதில் தாயாகும் பெண்கள்.. தற்கொலை செய்யும் பெற்றோர்... பல்வேறு நிகழ்வுகளால் எழுதிய உளறல்....





தாஜ் மகாலால் காதல் வாழ்கிறது
இங்கு காதலோ காமத்தில்
ஏரிகின்றது..... 


இது ஏன் ....???
இது காதலில் குளிர் காய்தலோ...!!

ஒழுங்கைக்கு ஒழுங்கை கட்டப்படுகிறது
நவீன தாஜ்  மகால்கள்.. இன்றய எம்
சாஐகான்களால்... 


இது ஏன் ....??
காதலின் நினைவுக்கோ....!!

காதலுக்கும் ஓராடாண்டாம் - அவர் தம்
குழந்தைக்கும் ஓராண்டாம்.. இது 
ஏன்ன மாயம்.... 


இது ஏன் ..??
காதலின் வேகமோ....??

முப்பது வயதாகியும் கன்னிகளாய்
பல பெண்கள்... பதினைந்து வயதிலே
கற்பிணிகளாய் சில பெண்கள்..


இது ஏன்....??
காதலின் சூதோ...??

கழுத்தில் தாலி இல்லை
வயித்தில் பிள்ளையாம்... 
இருக்கவீடில்லை.. 
அப்பனையே தெரியாமல்
பிறந்துதாம் பெண் பிள்ளை....!!

பள்ளிக்காதல், படலைக் காதல், 
சந்திக் காதல், சந்தித்த காதல்
கள்ள காதல், செல்லில் காதல் எல்லாம்
வர நம் நல்ல காதல் என்னாவது.....??

தமிழ்நிலா 
நகைகள் அழகுக்கு அணியும் காலம் போய்.... ஆடம்பரமாகி விட்டன.. குறைத்தால் அழகு.. கூட்டினால் ஆபத்து..



யார் பாத்தாலும் எனை 
பிடிக்கும் - என்னை
யார் பாத்தாலும் எனக்கு
பிடிக்கும்...!!

திருவிழாவில் எனை கண்டால்
சிலருக்கு கையரிக்கும்...
தரையினில் எனை கண்டால்
பலருக்கு கண்கூசும்....!!
பூட்டி வைத்தாலும் என்றும்
என் பெருமை குறையாது...
சேற்றில் போட்டாலும்
என் அழகு குறையாது....!!

நான் நிறைந்து போனால் - உன்
உயிருக்கு எமனாவேன்....
எனை குறைத்துப் போட்டால் - உன்
அழகுக்கு உரமாவேன்.....!!

தமிழ் நிலா 

கன்னிஇளம் பேடு
என்னும் வீடு வரவில்லை..
குள்ள நரி கூட்டம் இப்போ
வீதியில் வந்து நிக்கும்..

மேற்கில் விழும் ஒளியோடு
கருமை வந்து உலகை 
கவ்விபோக இங்கே இரவகிபோகும்..

சப்தமே அடங்கிப்போகும்..
இரவின் அரவம் 
தாண்டவமாடும்..

தெற்கில் இருந்து வடக்கு வரும் 
சுடலை குருவிகள் சத்தம்..
நாய்களின் ஊளை..
ஆந்தையின் அலறல்..
கழுகின் காத்திருப்பு..

படபடக்கும் மூச்சை
பரபரக்க வைக்கும்..

நினைக்கையில்
சிலிர்க்கும் காலமிது..
எட்டு மணியாகியும்
கூட்டை எட்டவில்லை இன்னும் ..

ஊர் சேவல் அழைக்கையில் 
போகும் பருவம் தான் இது 
இப்போ சேவல்களும் 
உறங்கிடும் நேரமிது...

நரி பிடித்ததோ..
ஓநாய் அடித்ததோ...

யாழ்பாணத்தில் சாவு
மலிந்த சாமான்..
அதிலும் கொலையும்
கற்பழிப்பும் நல்ல மலிவுதான்..

யமன் வந்து நடை பாதை
கடை போட்டான்..
பெட்டிக்கடை காரருக்கு
புழுத்த சந்தோசம்..

கடலில் கிடந்த பிணம்
தாக்க குழி தோண்ட அங்கே
சிதைந்த உடல் வருமாம்..
கிணறும் இப்போ ரத்தம் குடிக்கிறது..
கயிறும் இப்போ உயிரை எடுக்கிறது..

ரத்தத்தால் தினம் 
அச்சேறும் நாளேடுகளின்
தலைப்பு செய்தி 
கண்ணீரால் காவியமாகும்...
இந்த ஊரில் நாளை 
இது தான்  வருமோ...??

" காணாமல் போன பெண்
சடலமாக மீட்பு..."
நேரடியாக பார்த்தவற்றில் எனக்கு பாதித்தவைகளில் ஒன்று.



யிருக்கும் விலை உண்டு,
கொலை உண்டபோது தான்
புரிந்து கொண்டேன் இதை
இந்த பூமியிலே....

இன மத ஜாதி பாராத
எத்தனையோ நட்பினிலே..
அகோரம் நிறைந்த அந்த நட்பையும்
பார்த்துவிட்டேன்
இந்த பாரினிலே....!!!

போர்க்களத்திலே நீதி சொன்ன
கண்ணன் எங்கே....
நட்பென்று பேசி
மந்தைக்குள் புகுந்து விட்ட
குள்ளநரிகளை பார்த்த பின்னுமா....
ஜேசு தோன்றவில்லை....???

மனம் பார்த்து வருமாம் நட்பு..
ஜயோ பணம் பார்த்து வரும்
நட்பை கூட கண்டுவிட்டேன்..
பாவம் செய்த கண்களாலே.....
அல்லாவே உன் கண்கள் எங்கே.....???

நிலை அற்றது பணம்...
குறை அற்றது அன்பு....
கொடிய மிருகமே...
அவன் கண்ணை பார்க்கும் போது
அது தெரியவில்லையா ...???

புத்தனே நீ பெற்ற ஞானம் எங்கே....??
ஒரு துளியாவது
கொடுத்திருக்கலாமே....

நட்பென்று பழகி....
அவன் மூச்சில் வாழ்ந்து.....
அவன் மூச்சையே மூட வைத்த
அந்த நண்பர்கள்......

பணத்துக்காக உயிரை விலைபேசி
நட்பை கொன்று புதைத்த
அந்த இளைஞர்கள்....
இப்போது சட்டத்தின் பிடியில் இருந்தாலும்.....
எதிர்காலத்தில் தப்பித்து போனாலும்....

..
தங்கள் மகனின் வருகைக்காய்
ஏங்கும் பெற்றோருக்கும்...
சகோதரனின் வருகைக்காய்
ஏங்கும் உடன்பிறப்புக்களுக்கும்...

அவனின் அன்பிற்காக ஏங்கும்
உறவுகளுக்கும்.....
உண்மையான நண்பர்களுக்கும்....

அவர்கள் கொடுக்க போவது என்ன.....????
நண்பனின் உயிரா....?
இல்லை தங்களது உயிரையா....?

27.03.2010
யாரோ ஒருவன்

Next PostNewer Posts Previous PostOlder Posts Home