Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அண்மையில் பத்திரிகையில் பார்த்த செய்தி என்னை ஏதோ செய்தது.. இரு பிள்ளைகளுக்கு தாயான தான் மனைவி இன்னொருவனுடன் போவதை தடுக்க மக்கள் மத்தியில் காலில் விழுந்தாராம்... பாவாம் 



ற்றையடிப்பாதையில
ஓரமாய் போறவளே......
என் ஒற்றை மனசு கூட
உன் பின்னால போகுதடி....!!!

கன்னியே.... என் மனதை
களவாடி போனவளே......
இந்த காரிருளில்
கையில் பெட்டியுடன் நீ
களவாக போவதெங்கே.....??
உன் பின்னாலே புருஷன் வருகிறனே
ஒருதடவை பாத்தாயா...??
உன்பின்னால ஒரு உருவம் வருதென்று...
ஓரமாயேனும் பாரேண்டி.....

எங்கோ பாட்டு வர நீ 
எச பாட்டு பாடுகின்றாய்.. .
என் இதயம் இசை மீட்குதே.
சோகத்தோடு,.. அது..
காதோடு கேட்கலயா...???
 காரிருளில் என்ன சத்தம்.....??

இந்த நேரத்தில்.... இந்த பாதையில்
வருவது தான் யாரடி...?? வந்தவன்...
கைபோடுகிறான்.... ஏனடி
நீ கூச்சல் போடவில்லை....
அவன்..யாரடி... உன் கணவன் நானடி...??
தாலியை கூட காணவில்லையே....
எனை கழட்டி விட்டாயா...???
சிரிக்கின்றானே.... அவன்
உன் கண்ணாளனா......???

உன் பின்னால வந்த என் மனசு
நொருங்கிப்போனதடி....!!
என் பிள்ளைக்கு என சொல்ல..
உயிரை உறையவைத்த
ஒரு மணிக் காதலியே.....
ஒற்றையடிப்பாதையில ஒரு
குடும்பம் தான் போக......
கண்ணீரால் வாழ்தியபடி ஓரு
இதயம் தான் திரும்ப......
கலைந்து போனது...என்
வாழ்க்கயின் கனவு..!!

தமிழ் நிலா 
எனக்கு வாழ்க்கை கசக்கிறது அதை சுவைக்க கவியாக்கினேன் உவர்க்கின்றது கண்ணீர் வந்து. இது எல்லாம் மாறுமா??



மேகம் இல்லா வானை கண்டேன்,
நிலவே இல்லா இரவை கண்டேன்,
மண்ணை தொடாத மழையை கண்டேன்,
கடலை சேரா நதியை கண்டேன்...!!

குரலை மறந்த குயிலை கண்டேன்,
கால்கள் இழந்த மயிலை கண்டேன்,
கூட்டை தொலைத்த குருவிகள் கண்டேன்,
வீடே இல்லா உலகினை கண்டேன்.....!!

இலைகள் அற்ற கிளைகள் கண்டேன்,
மொட்டு வராத மரத்தை கண்டேன்,
மணமே இல்லா மலரினை கண்டேன்,
விதைகள் வராத கனிகளை கண்டேன்...!!

இசையே இல்லா ஸ்வரங்கள் கண்டேன்,
தாளம் மறந்த பாட்டை கண்டேன்,
துளையே இல்லா குழல்கள் கண்டேன்,
தந்தி அறுந்த வீணையைக் கண்டேன்......!!!

தந்தையை இழந்த பிள்ளையை கண்டேன்,
பிள்ளையை பிரிந்த தாயை கண்டேன்,
கணவனை மறந்த காரிகை கண்டேன்,
கற்பை தொலைத்த பெண்களை கண்டேன்....!!

நன்றி மறந்த நண்பர்களை கண்டேன்,
ஆயுள் குறைந்த மிருகம் கண்டேன்,
புத்தகம் இல்லா நூலகம் கண்டேன்,
நீதி இல்லா சட்டத்தை கண்டேன்....!!

கத்தி திரியும் கயவர் கண்டேன்,
எட்டி உதையும் உயர்ந்தவர் கண்டேன்,
தலையே இல்லா உடல்களை கண்டேன்,
மனிதம் செத்த உயிர்களை கண்டேன்....!!

தமிழ் நிலா


காற்றுவெளி September 2010

பாடசாலை எங்கும் ஆசிரியர் தினம் கொண்டாட பட்டாலும் ஆசிரியர்களுக்குரிய மதிப்பை கொடுப்பதில்லை... அவர்களது பணியை உணர்வதில்லை


லகத்தில் பல தினம் இருக்கு 
உமக்கும் ஒரு தினம் இருக்கு,
அன் நாளில், தரணியில் புகழ் சேர்க்க 
எமக்கு ஒளி ஊட்டும் இறைவா உமக்கு 
மலர் சூடுகிறோம் உம் குழந்தைகளாக....!

தினம் தினம் நீர் விளித்து 
எமை உயர வைத்தாய்... 
உறக்கம் ஏதும் இன்றி 
எமை மேலே ஏறிவிட்டீர்...!

நீர் ஏறிய ஏணியில் எமை ஏற்ற
பல முறை விழுந்துவிட்டீர்...!
உம் காலில் நாம் விழுவதற்கு
இன் நாள் ஒன்று போதாது குருவே..!

நாளும் நீர் கூறும் அறிவுரை புளிக்கும் எமக்கு... 
அது நம் வயது... எம் வெற்றியின் மறுகணமே 
இனிக்கும் அவையே தேனாக... அது தான் எம் மனது..!

யார் யாரோ கல்லில் காணும் கருணையை
உம் உளத்தில் காணுகிறோம்...
பூமிக்கு வந்த தெய்வங்கள் நீங்களே....
நீங்கள் தேய்ந்து எமை வளர்த்திர்கள்...
வளர்ந்தோம் உம்மையே திரியாய் கொண்டு....
நீர் ஏற்றிய தீபம் என்றும் அணையாது... 
உமை மறந்து எம் இதயம் ஒருநாளும் போகாது....!

உமை வாழ்த்த உயிர் உள்ள 
சொற்கள் இன்றி தவிக்கின்றோம்....! 
உங்கள் சந்தோசத்தை பார்த்து  நாம் 
ஊமையாகி போகின்றோம்...

தமிழ் நிலா 
மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010
A9 வீதி திறக்கப்பட்ட பின்பு தம் ஊர்களுக்கு வந்து போகும் சொந்தங்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த சிறு துளி...



A9 வீதியால யாழ்ப்பாணம்
போப்போறம்....
அப்பா அம்மா காலத்தில
யாழ்தேவில வந்து போனம்...

செம் மண் வாசனை சொல்லுது
ஊருக்கு போறோம் எண்டு...
பனை ஓலை காற்று சொல்லுது...
யாழ்ப்பாணம் போறோம் எண்டு...

முகமாலை தொடக்கம்...
யாழ்ப்பாணம் வரை அப்போ
நம்ம சொந்தம்.... இது தானே
இப்போ நான் வாழும் சொர்க்கம்...

பனங்காய் பணியாரமும்,
பருத்தித்துறை வடையும்
நினைத்தாலே இனிக்கும்
சுவை வாயில் ஊறும்....
மீசாலை மாம்பழத்துக்கும்
கொக்குவில் கொய்யக்கும்
அடிபட்ட காலம் இப்ப கூட
நினைவிருக்கு....

மட்டுவில் கத்தரிக்காய் வாங்க
சாவகச்சேரி போட்டுவந்து,
அச்சுவேலி சந்தையில
ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு..
மண்டான் சுருட்டடிக்க
தொண்டமனாறு போனகதை
சொல்லாமை மறைப்பேனா....

தட்டிவான் ஏறி வல்லிபுரம்
போகையில... காசு வாங்க
கிழவன் வர இடைல றங்கி
ஓடினதையும்.....
நல்லூர் திருவிழாக்கு
அடிக்கடி போனதையும், அங்கு
வந்த பெண்களுக்கு செல்லமாய்
இடிச்சதையும்...
மறக்க தான் முடியுமா??

எங்கள் சொர்க்கம் என்றும்
பச்சையாய் தான் இருக்கும்.
ஒழுங்கை எங்கும் சின்ன சின்ன
காதல்களும் நடக்கும்......
காதல் பெண்ணை பாக்க வேண்டி
பள்ளியில தவம் இருப்போம்...
பள்ளிக்கூடம் விட்டா காணும்
சைக்கிள்ள பறந்திடுவோம்...

யாழ்ப்பாணம் போறதெண்டால்
யாருக்கு தான் கஷ்டம்...
நான் யாழ்ப்பாணம் போறன்
என் வாழ்வை தொடர... .

தமிழ் நிலா

காற்றுவெளி july 2010



என் கனவே
சருகாக கலைந்ததேனோ..
விதியே..
என் ஆசைகள் கொன்று
புதைத்ததெங்கே..
நிழலே
நீ நிஜமாகி வந்ததென்ன..
நிலவே
தடுமாறி போனதெங்கே..

போட்டியே இல்லாமல்
தோற்று போகிறேன்..
போகும் இடம் எல்லாம்
வெக்கி சாகிறேன்...

காலமே....

கற்பனையை விட்டு
நெஞ்சை களவாடி
போனதேனோ..
புன்னகையை தீமூட்டி
புல்லாங்குழலை
நீ தந்துவிட்டாய்...

இறைவா..
பூக்காத மரமானேன்- என்
பூமி மட்டும் மண் ஆனதே...

கல்லே உன்னை கடவுள் என்றதார்..?
உயிரே உனக்கெனி இந்த உடல்ஏனோ...?
தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...


நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர் 
மழையில் நனைகிறேன்..

வீதியில் போகையில் 
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க 
குனிந்து தான் போகிறேன்...

பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....

புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....

ஒரு முறை தோற்றால் 
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...

பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!

நண்பர்கள் நிறைந்த 
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....

 பட்டம் பெற்றோர் 
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து 
பிளைகிறேன் தினம் தினமே..

என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு 
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது 
என் வாழ்க்கையுமே.....

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home