Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நேற்று ஒரு கனவு
மீண்டும் அதே யுத்தகளம்...

பகவத்கீதைகள்,
குர் ஆன்கள்,
பைபிள்கள்
பௌத்த ஆகமங்கள்
தான் உயிர் கொல்லும்
ஆயுதங்கள்...

போராடும் களங்களில்
ஜாதிகள், மதங்கள்
தான் வீரர்கள்...

பால்வீதியில்
நிலவினைப்போலே...
வான வீதியில்
பறவைகள் போல

நான் மட்டும் சுதந்திரமாக...
உலகத்தை விலக்கி வைத்துவிட்டு.....

தமிழ்நிலா


னக்கு சுதந்திரம்
வேண்டும்...

பிறக்கும் வரை
அடைபட்டு வாழ்ந்தோம்..
அது சுகம்..
வளர்கையிலும் அப்படிதான்..
வளர்ந்தபின்னும் அப்படிதான்...
இது சுமை

எல்லாம் முடிந்தது
சுதந்திரம் என்றார்கள்...
அடாவடிகளில்
ஆண்களுக்கு சுதந்திரம்...
ஆடைகளில்
பெண்களுக்கு சுதந்திரம்...
இது தான் கிடைத்தது...

பேனா முனை நோக்கிய
துப்பாக்கி முனைகள்...
சீருடைகளில் ரத்த கறைகள்..
நீண்ட பயணங்களில்
நிலகீழ் கண்ணிகள்...
எங்கே சுதந்திரம்..

வெள்ளைக்காரர்களிடம் இருந்து
கிடைத்தாகிவிட்டது..
கொள்ளைகாரர்களிடம் இருந்து..
எப்போ கிடைக்கும்..???

சுதந்திரம் கேட்டவர்கள்
தியாகிகள் ஆனார்கள்..
கம்பிக்கு பின்னால் பலர்
காணாமல் போனார்கள்...

கூட்டில் இருக்கும்
கோழிகளுக்கு சுதந்திரம்..
மந்தை ஆடுகளுக்கும் சுதந்திரம்...
காட்டு சிங்கங்கள்
வீட்டுக்குள் வந்ததால்
நாட்டில் இல்லை
என்றுமே சுதந்திரம்..

எனக்கு சுதந்திரம்
வேண்டும்...
எப்போ கிடைக்கும்..
இல்லை இல்லை..
எங்கே கிடைக்கும்..??

காற்றுவெளி March 2012 

தமிழ்நிலா


செய்வினையாய்
விலைவாசி...

திணறும் வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்களில்
விலை உயர்வு...

ஏழைகள் வீட்டில் 
நிலாவுக்கு தான் இனி வேலை...
மண்ணெண்னைய் விலை ஏற்றமாம்..

மீண்டும் சூரியனுக்கு ஆபத்து..
சக்தியை உறிஞ்சபோகிரார்கள்...
மின்சாரம் விலை ஏற்றமாம்.....

விபத்துகளும் குறையவில்லை
பெற்றோல் விலை ஏற்றமாம்...

உரசல்களும் குறையவில்லை...
பேருந்து கட்டண ஏற்றமாம் 

தாசிகளும் குறையவில்லை...
மாப்பிளை விலையேற்றம்...

நாட்டில் விலை  ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
காசும் விலை  ஏற்றம்...
கண்ணீரில் உப்பும்  ஏற்றம்..
பாணும் விலை ஏற்றம்...
பட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...

தமிழ்நிலா

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.

ப்போது ஊடகங்கள் எல்லாவற்றிலும் அதிகமாக பேசும் செய்தியாகவும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரையும் கலங்க வைத்திருக்கும் செய்தி மரீ கோல்வின் இன் படுகொலை.

வர் பற்றிய தகவல்களை நீண்ட நாட்களாக தேடி ஒருவாறு இன்றுதான் கண்டு பிடித்தேன். 2006 இல் நாங்கள் சாதாரணதரம் கற்கும் போது எமது தனியார் கல்வி நிறுவனத்தில் (பிறைற்றின்)  எமக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர். மிகுந்த ஆளுமை உள்ளவர்,
ஒரு நாள் ஒரு புத்தகம் கொண்டுவந்திருந்தார். அந்த புத்தகத்தின் பெயர் "எனக்கு மரணம் இல்லை" அதில் எழுதியவர் பெரிய ஐங்கரன் என்று இருந்தது.

மனிதாபிமானம்
என்ன என்பது நேற்றுவரை
எனக்கு தெரியவில்லை...

தெரிந்துகொண்டேன்

கற்பிணி பெண் ஒருவர்
நிற்கையில் அவளுக்காக
ஒதுக்கப்பட்ட ஆசனத்தில்
நாமே இருப்பதையும்....

கையில் குழந்தையுடன்
தாய் வந்தாலும் - இவள்
பெண்தானே என்று 
ஒருமுறை உரசி
கடந்து போவதையும்...

மனிதாபிமானம் என்று 
இன்று தான் அறிந்து கொண்டேன்...!

தமிழ்நிலா

வவுனியா - யாழ்ப்பாணம்
தனியார் பேருந்து
மாலை 4 .45
17-02-2012
Next PostNewer Posts Previous PostOlder Posts Home