Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...

ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....

ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அவனி... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..

கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவார்கள்
அவர்கள்...

சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்
ஓயாதொரு பெரும் போர்.
தண்ணீர் வேண்டி 
கண்ணீர் கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
போர்தான்...

இப்போது மிச்சம்..
எதுவுமில்லை..
உடைந்த நம்பிக்கைகள் மட்டுமே!
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...

பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....

தமிழ்நிலா

காற்றுவெளி 2014


நடந்து போகையில்
கடந்திருந்தது ஒரு கல்..
அழைத்தது
கடவுளின் எச்சம் என்றது..

கல் எடுத்து சிலைவடித்து..
கருவறையில் சிறையிலிட்டு
கடவுள் என்று சொல்லிட்ட
கல்லின் எச்சம் அது...



காதல்
எப்போதும்,
எப்படி வேண்டுமானாலும்...
யார்மேலும்,
எதன் மேலும்....
எப்படியோ வந்துவிடுகிறது..

வலிகளை  பொறுக்கும் தாய்க்கு
வெளிவரும் குழந்தை மேல் காதல்...
பால் மணம் மாறா குழந்தையின்
கன்னக்குழி மேல் எனக்குக் காதல்...




கூட்டினை வெறுத்து காட்டினுள் 
சுகந்திரக் காற்றை சுவாசிக்க 
தயாராகிற்று ஒரு பறவை 
கம்பிகள் உடைத்து 
வானத்தில் இறக்கை விரித்தது..


என் சந்ததியிற்கு
விடுச்செல்ல என்னிடம்
எதுவும் இல்லை

என்னில் மிஞ்சும்
ஒருபிடி சாம்பலும்
சில நாட்களில்
கரைந்துபோய்விடும்...



திரு.நடராஜா ரவிராஜ் எமது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர். இவர் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். M.G.R இனால் ஈர்க்கப்பட்டு அரசியலில் புகுந்த இவர் காந்தீயத்தை மிகவும் நேசித்தார் என்பது பெருமையானது.

Next PostNewer Posts Previous PostOlder Posts Home