2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா எங்கள் வீட்டில் ஒரு பிரப்பம் கூடை ஒன்று இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் கூடையில் இருக்கும் துணிகளை கீழே கொட்டிவிட அவர் எண்ண ஆரம்பிப்பார்.
முந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் "லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் " எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இடமும் தான். அப்ப உந்த சண்டை நேரம் கரண்ட் எப்ப நிக்கும் எண்டு தெரியாது, மாறி மாறி ட்ரான்ஸ்போமெருக்கு அடி விழுறதால திடீர் எண்டு கரண்ட் நிக்கும். அதனால அந்தக் காலத்தில் மின்சாரம் மீது முழு நம்பிக்கை வைக்காமல் மண்ணெண்னை அரிக்கேன் லாம்பினை அருகில் வைத்துக் கொள்ளுவார்கள்.






