Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யாழ்ப்பாணம் நிலத்தடி நீரைத் தமது குடிநீருக்கான பிரதான ஆதாரமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவக பகுதிகளில் வெட்டு அல்லது கட்டுக் கிணறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் கிணறுகள் போன்ற நீராதாரங்கள் காணப்பட்டன.


எமது கலாசாரத்தின் அடையாளங்கள், நினைவுகளின் சந்ததி கடத்தல்கள் பல அண்மைக்காலங்களில் காணாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளாமலே அழித்துவிடுகின்றோம். அவற்றை நாம் தெரிந்து கொண்டால் நம் பாரம்பரியம், மரபுரிமைகள் காக்கப்படும்.


யாழ்ப்பாணத்திற்கு அருகே செம்மணி என்னும் இடம் உண்டு, இது கண்டி வீதியில் நாவற்குழி - அரியாலைக்கு இடையேயான பகுதியாகும். இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களின் சாட்சியாக இங்கு பல புதைக்குழிகள் இருக்கிறது. கிருசாந்தி படுகொலை வழக்குடன் பேசுபொருளாகின்றது. இது செம்மணி மனிதப் புதைகுழி என்று அன்றுமுதல் அழைக்கப்படுகிறது.

தென்மராட்சி ஒரு காலத்தில் செழுமை தரும் விவசாய நிலங்களால் நிரம்பிய பகுதி, இன்று சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு, நீர்நிலைகள் அற்றுப்போதல் போன்ற அதிகழவான குழாய் கிணறுகள் அமைத்தல் போன்றவற்றால் நிலத்தடி நீரின் அழிவை கண்முன்னே காண்கிறோம். 


வைத்தியசாலை உட்கட்டுமானமும் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆளணி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. வெளிவாரி சுகாதாரத்தொழிலாளர் இருவரே இருந்தார்கள். பலத்த முயற்சியின் பின்னர் மேலும் இருவர் கிடைத்தார்கள். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2024.06.03 வரை கடமையாற்றிய வைத்திய அத்தியட்சகர் Dr. சி.குமரவேள் நிரந்தர பிரதி மருத்துவ நிர்வாகத்தர நியமனம் பெற்று ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது அவரது இடத்துக்கு இதே நியமன பட்டியலில் நியமனம் பெற்ற Dr. த. காண்டீபன் நியமிக்கப்பட்டார்.

சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும். 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home