Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
வடமாகாணத்தின் முக்கிய நிர்வாகப் பகுதிகளில் ஒன்றான தென்மராட்சி, 60 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பரந்த பரப்பளவு கொண்ட பிரதேசமாகும். விவசாயம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சிறு தொழில்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் இந்தப் பகுதி, வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கியத் தளமாக விளங்குகிறது.

தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவை, 'தென்மராட்சி மேற்கு' மற்றும் 'தென்மராட்சி கிழக்கு' என இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கான பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. நீண்டகாலமாக நிலவிவரும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கவும், அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமெனக் கருதப்படுகிறது. இருப்பினும் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இலங்கை, இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் ஒரு அழகிய தீவு. எனினும், அதன் புவியியல் அமைப்பும், பருவமழைக் காலங்களும் அவ்வப்போது பலத்த இயற்கை அனர்த்தங்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள், வரட்சி மற்றும் கடலோர அரிப்பு போன்ற அனர்த்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாகப் பாதிக்கின்றன.

யாழ்ப்பாணம் நிலத்தடி நீரைத் தமது குடிநீருக்கான பிரதான ஆதாரமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவக பகுதிகளில் வெட்டு அல்லது கட்டுக் கிணறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் கிணறுகள் போன்ற நீராதாரங்கள் காணப்பட்டன.


எமது கலாசாரத்தின் அடையாளங்கள், நினைவுகளின் சந்ததி கடத்தல்கள் பல அண்மைக்காலங்களில் காணாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளாமலே அழித்துவிடுகின்றோம். அவற்றை நாம் தெரிந்து கொண்டால் நம் பாரம்பரியம், மரபுரிமைகள் காக்கப்படும்.


யாழ்ப்பாணத்திற்கு அருகே செம்மணி என்னும் இடம் உண்டு, இது கண்டி வீதியில் நாவற்குழி - அரியாலைக்கு இடையேயான பகுதியாகும். இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களின் சாட்சியாக இங்கு பல புதைக்குழிகள் இருக்கிறது. கிருசாந்தி படுகொலை வழக்குடன் பேசுபொருளாகின்றது. இது செம்மணி மனிதப் புதைகுழி என்று அன்றுமுதல் அழைக்கப்படுகிறது.

தென்மராட்சி ஒரு காலத்தில் செழுமை தரும் விவசாய நிலங்களால் நிரம்பிய பகுதி, இன்று சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு, நீர்நிலைகள் அற்றுப்போதல் போன்ற அதிகழவான குழாய் கிணறுகள் அமைத்தல் போன்றவற்றால் நிலத்தடி நீரின் அழிவை கண்முன்னே காண்கிறோம். 

Previous PostOlder Posts Home