தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவை, 'தென்மராட்சி மேற்கு' மற்றும் 'தென்மராட்சி கிழக்கு' என இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கான பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. நீண்டகாலமாக நிலவிவரும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கவும், அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமெனக் கருதப்படுகிறது. இருப்பினும் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகின்றது.
எமது கலாசாரத்தின் அடையாளங்கள், நினைவுகளின் சந்ததி கடத்தல்கள் பல அண்மைக்காலங்களில் காணாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளாமலே அழித்துவிடுகின்றோம். அவற்றை நாம் தெரிந்து கொண்டால் நம் பாரம்பரியம், மரபுரிமைகள் காக்கப்படும்.
யாழ்ப்பாணத்திற்கு அருகே செம்மணி என்னும் இடம் உண்டு, இது கண்டி வீதியில் நாவற்குழி - அரியாலைக்கு இடையேயான பகுதியாகும். இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களின் சாட்சியாக இங்கு பல புதைக்குழிகள் இருக்கிறது. கிருசாந்தி படுகொலை வழக்குடன் பேசுபொருளாகின்றது. இது செம்மணி மனிதப் புதைகுழி என்று அன்றுமுதல் அழைக்கப்படுகிறது.
சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும்.
Previous PostOlder Posts
Home
.png)

.png)
.png)


