Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
தோல்வியால் தினம் நோகும் ஒருவனின் மனம் பேசுகிறது...


நிலா போல் தேய்கிறேன்
வெய்யிலில் காய்கிறேன்
தினமும் இரவில் கண்ணீர் 
மழையில் நனைகிறேன்..

வீதியில் போகையில் 
பல முகம் காண்கிறேன்,
அவை எல்லாம் எனை நோக்க 
குனிந்து தான் போகிறேன்...

பள்ளி எனக்கு பிடிக்கவில்லை
பாடம் எனக்கு இனிக்கவில்லை,
கையெழுத்து அழகாய் இல்லை
தலை எழுத்தும் நல்லாய் இல்லை....

புத்தகம் பாக்கையில்
பந்திகள் சிரித்தன...
கொப்பியில் எழுத்துக்கள்
செருகியே கிடந்தன....

ஒரு முறை தோற்றால் 
தோற்றது தான் எதிலுமே..
ஜெயிக்க நினைக்க
தோற்கிறேன் மீண்டுமே...

பெற்றோர் வெறுத்தனர்
தொடர் தொடர் நொடிகளுமே..
சொந்தங்கள் வெறுத்தது
எனை தினமே...!!

நண்பர்கள் நிறைந்த 
என் பயணத்திலே..
எனக்காக ஒருத்தன் இல்லை
வரும் வீதியிலே....

 பட்டம் பெற்றோர் 
எனை மட்டம் தட்டிப்போக
நான் செத்து செத்து 
பிளைகிறேன் தினம் தினமே..

என்றுமே தோற்றதில்லை
கல்வியிலே -- எனக்கு 
இலட்சியம் இருந்தது நெஞ்சினிலே..
திசை மாறி போன பாதையாலே
சிதைந்து தான் போனது 
என் வாழ்க்கையுமே.....

தமிழ்நிலா 
பெண்கள் ஏமாறுகின்றார்களா இல்லை ஏமாற்றப்படுகின்றார்களா தெரியவில்லை... காதல் எனும் வார்த்தையின் வலிமையால் வதைக்கப்படுகின்றார்கள்... பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் மிதக்கவிட்டான்...!!
உயிருக்குள் உயிரை
வைத்த கடவுள்
எனை கண்ணீரில் மிதக்கவிட்டான்...!!!

நெஞ்ச்சோடு சுமக்கும்
அவன் நினைவும்...
வயிற்றோடு சுமக்கும்
அவன் உயிரும்....
எனை கொல்லுதடி
சமுகம் கூட ஒதுக்கி விட்டதால்...

உலகத்தில் உயிரை
படைத்த கடவுள்....
உயிருக்குள் ஆசையை
வைத்தான்...மறக்காமல்
காதலையும் வைத்தான்...
காதலில் காமத்தையும்
வைத்து விட்டான் அவன்.....!!
எனை வீதியில் விட்டுவிட்டான்...

காதல் எனும் வார்த்தையில்
காமத்தையும் புதைத்து...
பெண்களிடம் குளிர்காயும்
இவன் போல் காமுகர்களை
பெண்ணினமே ... விரட்டிவிடு....
உன்னையும் அணுகலாம்...
ஒரு வினாடிக்கு ஒரு தடவை
என்றாலும் சிந்தி....

அபலை என் கால்களோ
வாழ்வை முடிக்க நடக்கிறது...!!
எம் காதலின் சின்னமோ..
வாழ்வை தொடர கால்களால்
உதைக்கிறது....!!!!!

இந்த உலகத்தை புரியாமல் ........!! !

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home