Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

என் தங்கை உனக்கு....!!

Leave a Comment
பெண்கள் ஏமாறுகின்றார்களா இல்லை ஏமாற்றப்படுகின்றார்களா தெரியவில்லை... காதல் எனும் வார்த்தையின் வலிமையால் வதைக்கப்படுகின்றார்கள்... பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் மிதக்கவிட்டான்...!!
உயிருக்குள் உயிரை
வைத்த கடவுள்
எனை கண்ணீரில் மிதக்கவிட்டான்...!!!

நெஞ்ச்சோடு சுமக்கும்
அவன் நினைவும்...
வயிற்றோடு சுமக்கும்
அவன் உயிரும்....
எனை கொல்லுதடி
சமுகம் கூட ஒதுக்கி விட்டதால்...

உலகத்தில் உயிரை
படைத்த கடவுள்....
உயிருக்குள் ஆசையை
வைத்தான்...மறக்காமல்
காதலையும் வைத்தான்...
காதலில் காமத்தையும்
வைத்து விட்டான் அவன்.....!!
எனை வீதியில் விட்டுவிட்டான்...

காதல் எனும் வார்த்தையில்
காமத்தையும் புதைத்து...
பெண்களிடம் குளிர்காயும்
இவன் போல் காமுகர்களை
பெண்ணினமே ... விரட்டிவிடு....
உன்னையும் அணுகலாம்...
ஒரு வினாடிக்கு ஒரு தடவை
என்றாலும் சிந்தி....

அபலை என் கால்களோ
வாழ்வை முடிக்க நடக்கிறது...!!
எம் காதலின் சின்னமோ..
வாழ்வை தொடர கால்களால்
உதைக்கிறது....!!!!!

இந்த உலகத்தை புரியாமல் ........!! !

தமிழ்நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா