Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
A9 வீதி திறக்கப்பட்ட பின்பு தம் ஊர்களுக்கு வந்து போகும் சொந்தங்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த சிறு துளி...



A9 வீதியால யாழ்ப்பாணம்
போப்போறம்....
அப்பா அம்மா காலத்தில
யாழ்தேவில வந்து போனம்...

செம் மண் வாசனை சொல்லுது
ஊருக்கு போறோம் எண்டு...
பனை ஓலை காற்று சொல்லுது...
யாழ்ப்பாணம் போறோம் எண்டு...

முகமாலை தொடக்கம்...
யாழ்ப்பாணம் வரை அப்போ
நம்ம சொந்தம்.... இது தானே
இப்போ நான் வாழும் சொர்க்கம்...

பனங்காய் பணியாரமும்,
பருத்தித்துறை வடையும்
நினைத்தாலே இனிக்கும்
சுவை வாயில் ஊறும்....
மீசாலை மாம்பழத்துக்கும்
கொக்குவில் கொய்யக்கும்
அடிபட்ட காலம் இப்ப கூட
நினைவிருக்கு....

மட்டுவில் கத்தரிக்காய் வாங்க
சாவகச்சேரி போட்டுவந்து,
அச்சுவேலி சந்தையில
ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு..
மண்டான் சுருட்டடிக்க
தொண்டமனாறு போனகதை
சொல்லாமை மறைப்பேனா....

தட்டிவான் ஏறி வல்லிபுரம்
போகையில... காசு வாங்க
கிழவன் வர இடைல றங்கி
ஓடினதையும்.....
நல்லூர் திருவிழாக்கு
அடிக்கடி போனதையும், அங்கு
வந்த பெண்களுக்கு செல்லமாய்
இடிச்சதையும்...
மறக்க தான் முடியுமா??

எங்கள் சொர்க்கம் என்றும்
பச்சையாய் தான் இருக்கும்.
ஒழுங்கை எங்கும் சின்ன சின்ன
காதல்களும் நடக்கும்......
காதல் பெண்ணை பாக்க வேண்டி
பள்ளியில தவம் இருப்போம்...
பள்ளிக்கூடம் விட்டா காணும்
சைக்கிள்ள பறந்திடுவோம்...

யாழ்ப்பாணம் போறதெண்டால்
யாருக்கு தான் கஷ்டம்...
நான் யாழ்ப்பாணம் போறன்
என் வாழ்வை தொடர... .

தமிழ் நிலா

காற்றுவெளி july 2010



என் கனவே
சருகாக கலைந்ததேனோ..
விதியே..
என் ஆசைகள் கொன்று
புதைத்ததெங்கே..
நிழலே
நீ நிஜமாகி வந்ததென்ன..
நிலவே
தடுமாறி போனதெங்கே..

போட்டியே இல்லாமல்
தோற்று போகிறேன்..
போகும் இடம் எல்லாம்
வெக்கி சாகிறேன்...

காலமே....

கற்பனையை விட்டு
நெஞ்சை களவாடி
போனதேனோ..
புன்னகையை தீமூட்டி
புல்லாங்குழலை
நீ தந்துவிட்டாய்...

இறைவா..
பூக்காத மரமானேன்- என்
பூமி மட்டும் மண் ஆனதே...

கல்லே உன்னை கடவுள் என்றதார்..?
உயிரே உனக்கெனி இந்த உடல்ஏனோ...?
Next PostNewer Posts Previous PostOlder Posts Home