
என் கனவே
சருகாக கலைந்ததேனோ..
விதியே..
என் ஆசைகள் கொன்று
புதைத்ததெங்கே..
நிழலே
நீ நிஜமாகி வந்ததென்ன..
நிலவே
தடுமாறி போனதெங்கே..
போட்டியே இல்லாமல்
தோற்று போகிறேன்..
போகும் இடம் எல்லாம்
வெக்கி சாகிறேன்...
காலமே....
கற்பனையை விட்டு
நெஞ்சை களவாடி
போனதேனோ..
புன்னகையை தீமூட்டி
புல்லாங்குழலை
நீ தந்துவிட்டாய்...
இறைவா..
பூக்காத மரமானேன்- என்
பூமி மட்டும் மண் ஆனதே...
கல்லே உன்னை கடவுள் என்றதார்..?
உயிரே உனக்கெனி இந்த உடல்ஏனோ...?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா