Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அண்மையில் பத்திரிகையில் பார்த்த செய்தி என்னை ஏதோ செய்தது.. இரு பிள்ளைகளுக்கு தாயான தான் மனைவி இன்னொருவனுடன் போவதை தடுக்க மக்கள் மத்தியில் காலில் விழுந்தாராம்... பாவாம் 



ற்றையடிப்பாதையில
ஓரமாய் போறவளே......
என் ஒற்றை மனசு கூட
உன் பின்னால போகுதடி....!!!

கன்னியே.... என் மனதை
களவாடி போனவளே......
இந்த காரிருளில்
கையில் பெட்டியுடன் நீ
களவாக போவதெங்கே.....??
உன் பின்னாலே புருஷன் வருகிறனே
ஒருதடவை பாத்தாயா...??
உன்பின்னால ஒரு உருவம் வருதென்று...
ஓரமாயேனும் பாரேண்டி.....

எங்கோ பாட்டு வர நீ 
எச பாட்டு பாடுகின்றாய்.. .
என் இதயம் இசை மீட்குதே.
சோகத்தோடு,.. அது..
காதோடு கேட்கலயா...???
 காரிருளில் என்ன சத்தம்.....??

இந்த நேரத்தில்.... இந்த பாதையில்
வருவது தான் யாரடி...?? வந்தவன்...
கைபோடுகிறான்.... ஏனடி
நீ கூச்சல் போடவில்லை....
அவன்..யாரடி... உன் கணவன் நானடி...??
தாலியை கூட காணவில்லையே....
எனை கழட்டி விட்டாயா...???
சிரிக்கின்றானே.... அவன்
உன் கண்ணாளனா......???

உன் பின்னால வந்த என் மனசு
நொருங்கிப்போனதடி....!!
என் பிள்ளைக்கு என சொல்ல..
உயிரை உறையவைத்த
ஒரு மணிக் காதலியே.....
ஒற்றையடிப்பாதையில ஒரு
குடும்பம் தான் போக......
கண்ணீரால் வாழ்தியபடி ஓரு
இதயம் தான் திரும்ப......
கலைந்து போனது...என்
வாழ்க்கயின் கனவு..!!

தமிழ் நிலா 
எனக்கு வாழ்க்கை கசக்கிறது அதை சுவைக்க கவியாக்கினேன் உவர்க்கின்றது கண்ணீர் வந்து. இது எல்லாம் மாறுமா??



மேகம் இல்லா வானை கண்டேன்,
நிலவே இல்லா இரவை கண்டேன்,
மண்ணை தொடாத மழையை கண்டேன்,
கடலை சேரா நதியை கண்டேன்...!!

குரலை மறந்த குயிலை கண்டேன்,
கால்கள் இழந்த மயிலை கண்டேன்,
கூட்டை தொலைத்த குருவிகள் கண்டேன்,
வீடே இல்லா உலகினை கண்டேன்.....!!

இலைகள் அற்ற கிளைகள் கண்டேன்,
மொட்டு வராத மரத்தை கண்டேன்,
மணமே இல்லா மலரினை கண்டேன்,
விதைகள் வராத கனிகளை கண்டேன்...!!

இசையே இல்லா ஸ்வரங்கள் கண்டேன்,
தாளம் மறந்த பாட்டை கண்டேன்,
துளையே இல்லா குழல்கள் கண்டேன்,
தந்தி அறுந்த வீணையைக் கண்டேன்......!!!

தந்தையை இழந்த பிள்ளையை கண்டேன்,
பிள்ளையை பிரிந்த தாயை கண்டேன்,
கணவனை மறந்த காரிகை கண்டேன்,
கற்பை தொலைத்த பெண்களை கண்டேன்....!!

நன்றி மறந்த நண்பர்களை கண்டேன்,
ஆயுள் குறைந்த மிருகம் கண்டேன்,
புத்தகம் இல்லா நூலகம் கண்டேன்,
நீதி இல்லா சட்டத்தை கண்டேன்....!!

கத்தி திரியும் கயவர் கண்டேன்,
எட்டி உதையும் உயர்ந்தவர் கண்டேன்,
தலையே இல்லா உடல்களை கண்டேன்,
மனிதம் செத்த உயிர்களை கண்டேன்....!!

தமிழ் நிலா


காற்றுவெளி September 2010

Next PostNewer Posts Previous PostOlder Posts Home