Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நெஞ்சினில் கண்ணிவெடி..

Leave a Comment
தனங்களப்பு எனும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்.. இரண்டுபேர் கொல்லப்பட்டும், 3 பேர் காயமும் அடைந்தார்கள்... அந்த குடும்பத்தின் அழுகை வானை பிழந்து மழையை வரவைத்ததோ இல்லையோ. ஏன் மனதினை பிழந்து கண்ணீரை பொழிய விட்டது...


ரணியில் நாம் வாழ
தரையினிலே வைச்சோம்
வலது காலை வைக்க முன்னம்
வைச்ச காலை காணலயே..!!

கழனியில காலை வச்சோம்
எம் குலம் நீண்டு வாழ....
கால் போக தான் தெரிஞ்சுது
கண்ணியில வைச்சோம் என்று...!!

வைச்சவனும் தப்பிட்டான்
வந்தவனும் தப்பிட்டான்...
சண்டை முடிஞ்சுது எண்டு போன
சொந்தம் தான் செத்திச்சு...!!

குருதியில நான் கிடந்தேன்
அண்ணன் காலை காணலயே...
கட்டி பிடிச்சு அழுவம் எண்டா
உடம்பில உசிரும் இல்லை....!!

தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா