Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு



கூட்டினை வெறுத்து காட்டினுள் 
சுகந்திரக் காற்றை சுவாசிக்க 
தயாராகிற்று ஒரு பறவை 
கம்பிகள் உடைத்து 
வானத்தில் இறக்கை விரித்தது..


என் சந்ததியிற்கு
விடுச்செல்ல என்னிடம்
எதுவும் இல்லை

என்னில் மிஞ்சும்
ஒருபிடி சாம்பலும்
சில நாட்களில்
கரைந்துபோய்விடும்...



திரு.நடராஜா ரவிராஜ் எமது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர். இவர் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். M.G.R இனால் ஈர்க்கப்பட்டு அரசியலில் புகுந்த இவர் காந்தீயத்தை மிகவும் நேசித்தார் என்பது பெருமையானது.



மௌனத்தில் இருந்து
ஆரம்பிக்கின்றன
எல்லா நிராகரிப்புகளும்..

ஒன்று அல்லது
ஏதோவொன்று
எப்போதும் நிராகரிக்கப்படும்..
என்னால் அல்லது
உங்களால்...

பிறப்பில்
அன்பின் நிராகரிப்புகள்..


நீர் உண்டு நிலம் உண்டு
வானம் உண்டு வாயு உண்டு
தீ உண்டு நீ உண்ணும்
மயான பூமியாட இது...

இசைகள் இசையற்று
சுருதிகள் சுதியிழந்து
தாளங்கள் தப்பாய் போன

மனிதங்கள் மரித்து
புனிதங்கள் புதைந்து
கடவுள்கள் காணாமல் போன
மயான பூமியாட இது...

நட்பில் துரோகம்...
காதலில் காமம்...
உறவுகளில் வேஷம்...
எல்லாமே சபிக்கப்பட்ட

குணத்துடன் பணம் கலந்து
செய் நன்றிதனை மறந்த
மொழியுடன் மொழி கலந்து
தாய்மொழி கற்பிழந்த
மயான பூமியாட இது...

என்ன செய்வது
அவளும் என் தாய்தான்,
என்ன செய்வது
அவளும் என் சகோதரிதான்,
என்ன செய்வது
அவளும் என் தோழிதான்....

இசைகளை எழுப்பப்பார்க்கிறேன்,
சுருதிகளை மீட்கப்பார்க்கிறேன்,
என்னால் முடியவில்லை...

கடவுளை தேடிப்பார்க்கிறேன்..
புனிதங்களை தோண்டப்பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை...

எதுவும் என்னால்
செய்ய முடியாத வாழ்க்கை....
எதுவும் என்னால்
நிர்ணயிக்க முடியாத உலகம்...
ஓரமாய் இருந்து
எழுதிவிட்டு போகிறேன்.. நானும்
இந்த மயான பூமியிடம்...

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home