Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சிலநேரம் தீ..??

1 comment


சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...


சேவகர்கள் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
ராணியின் சிலம்பையும்
கோவலன் உயிரையும்...
எதுவும் கிடைத்தபாடில்லை...

இருப்பினும் மாதவிகள்
தீயிலும் வேகமாக
பரவி விட்டார்கள்...
கற்பின் வீரியம் குறைந்தாகிட்டு...
சிலநேரம் தீ அணையலாம்..

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா