Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பிம்பம் உடைத்தல்...

1 comment

என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை
இருப்பினும் 
இன்னமும் இருக்கிறது...
கசப்புகள் படைத்த
ஒரு படையலை
உண்டபதற்காய்
ஒரு குவளை விடம்
நிறைத்துவைத்துள்ளேன்....
இது முடியும் நேரம்
கடவுள் இன்றியும் இருக்கலாம்...
திரை அவிழ்கிறது உள்ளே, 
சில சிதறிய நரக துளிகள்
வெளியே...
உன் விசையின் விகாரங்கள்
விலகியிருந்தது..
ஒரு கண்ணாடி முகம்
இரண்டாய் உடைந்திருந்தது...
நீயும் நானுமாய்...
நடுவில் நட்பு...
தமிழ்நிலா
உதயன் 29.06.2014
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா