எப்போதும் இருக்கவே செய்கிறது,
ஒரு பெருந்துயர் துயர்,
குளிர் தேசத்து தீ என்னுள்..
தொடர்ந்தும் எரியலாம் அல்லது அணையாலாம்.!
உயிர் உருகும் நொடிகளில் வழிந்தேவிடுகிறாய்...
நீயின்றிய நேசங்கள் இன்னும் இருண்மையாய்..
விடியாலாம்...
முற்றிலுமாய் நீ அணைந்துவிடில்..
இன்னும் அணையாமல் தீ....
இருக்கவேசெய்கிறது
என்னுள் நீ கொட்டித்தீர்த்தவை...
எல்லாமாகியிருந்தாய்.. - உனக்காய்
எனை மாற்றியிருந்தேன்...
ஏமாற்றி இருந்தாய் நீ..
என் கண்ணாடி குவளைகளில் தீ..
அருந்திக்கொள்கிறேன்...
அதே கோலங்கள்.
நான் கீற நீ அழித்து கடந்தது.!
கோடுகளாயும் ... புள்ளிகளாயும்...
இனி இணைத்தல் தேவையற்றது!
பேரன்பின் இடைவெளிகள் அவை...
முன் ஜென்மங்களின் பகை
மொத்தம் உன்னிடத்தில்...
தீராது....!.
நேசங்களை உருமாற்றிய
ஆயிரம் கண்களில் உன் கண்களும்..
இங்கும் தீ.. ஏரித்தபடி...நீ..
எரிந்தபடி என் நேசங்கள்..
இதயத்தில் இருந்து இதயத்தில் மறைந்து போனவள் நீ,
தூங்கும் நேரம் உயிர் கொன்றுபோனவள் நீ..
விடியலும் இல்லை.. விடைகளும் இல்லை..
இன்னும் கேள்விகள்....!
நீ என்னுள் தூரமாய்.. நிஜங்களைப்போலே..
தீ என்னுள்..
தொடர்ந்தும் எரியலாம் அல்லது அணையாலாம்..
அணைந்துவிடாமல் நீயும்...
அணைத்துவிட நானும்...
தீராது....!.
நேசங்களை உருமாற்றிய
ஆயிரம் கண்களில் உன் கண்களும்..
இங்கும் தீ.. ஏரித்தபடி...நீ..
எரிந்தபடி என் நேசங்கள்..
இதயத்தில் இருந்து இதயத்தில் மறைந்து போனவள் நீ,
தூங்கும் நேரம் உயிர் கொன்றுபோனவள் நீ..
விடியலும் இல்லை.. விடைகளும் இல்லை..
இன்னும் கேள்விகள்....!
நீ என்னுள் தூரமாய்.. நிஜங்களைப்போலே..
தீ என்னுள்..
தொடர்ந்தும் எரியலாம் அல்லது அணையாலாம்..
அணைந்துவிடாமல் நீயும்...
அணைத்துவிட நானும்...
-தமிழ்நிலா-
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா