நான் பதினோராமாண்டு படித்துக்கொண்டிருந்த நேரம், நாட்டு பிரச்சனை, பயம் என்று சொல்லி அப்பா ஆறுமணிக்கெல்லாம் கேற் பூட்டிப்போடுவார். அதற்கு இரண்டு காரணம் இருந்தது ஒன்று நான் வெளியே போகக்கூடாது என்பது. மற்றையது யாரும் உள்ளே வரக்கூடாது என்பது. அன்றும் அப்படி தான் கதவு பூட்டியிருந்தது.