அன்று போயா, அம்மா கேட்டா "பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ" என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது.