சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும்.