Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வைத்தியசாலை உட்கட்டுமானமும் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆளணி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. வெளிவாரி சுகாதாரத்தொழிலாளர் இருவரே இருந்தார்கள். பலத்த முயற்சியின் பின்னர் மேலும் இருவர் கிடைத்தார்கள். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2024.06.03 வரை கடமையாற்றிய வைத்திய அத்தியட்சகர் Dr. சி.குமரவேள் நிரந்தர பிரதி மருத்துவ நிர்வாகத்தர நியமனம் பெற்று ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது அவரது இடத்துக்கு இதே நியமன பட்டியலில் நியமனம் பெற்ற Dr. த. காண்டீபன் நியமிக்கப்பட்டார்.

சமுர்த்தி வங்கி அமைக்கக்கூடாது என்பது எதிர்ப்போரின் நோக்கமல்ல, அதற்காக வெவ்வேறு காணிகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் உரியதரப்பினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை, மாறாக நகர சபையின் புதிய திட்டங்கள் அமையவுள்ள அல்லது உரிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காணிகளை பறித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள் அதற்கு அரச நிர்வாக, அரசியல் தலையீடுகளும் பிரதான காரணங்கள் ஆகும். 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home