Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
நேரடியாக பார்த்தவற்றில் எனக்கு பாதித்தவைகளில் ஒன்று.



யிருக்கும் விலை உண்டு,
கொலை உண்டபோது தான்
புரிந்து கொண்டேன் இதை
இந்த பூமியிலே....

இன மத ஜாதி பாராத
எத்தனையோ நட்பினிலே..
அகோரம் நிறைந்த அந்த நட்பையும்
பார்த்துவிட்டேன்
இந்த பாரினிலே....!!!

போர்க்களத்திலே நீதி சொன்ன
கண்ணன் எங்கே....
நட்பென்று பேசி
மந்தைக்குள் புகுந்து விட்ட
குள்ளநரிகளை பார்த்த பின்னுமா....
ஜேசு தோன்றவில்லை....???

மனம் பார்த்து வருமாம் நட்பு..
ஜயோ பணம் பார்த்து வரும்
நட்பை கூட கண்டுவிட்டேன்..
பாவம் செய்த கண்களாலே.....
அல்லாவே உன் கண்கள் எங்கே.....???

நிலை அற்றது பணம்...
குறை அற்றது அன்பு....
கொடிய மிருகமே...
அவன் கண்ணை பார்க்கும் போது
அது தெரியவில்லையா ...???

புத்தனே நீ பெற்ற ஞானம் எங்கே....??
ஒரு துளியாவது
கொடுத்திருக்கலாமே....

நட்பென்று பழகி....
அவன் மூச்சில் வாழ்ந்து.....
அவன் மூச்சையே மூட வைத்த
அந்த நண்பர்கள்......

பணத்துக்காக உயிரை விலைபேசி
நட்பை கொன்று புதைத்த
அந்த இளைஞர்கள்....
இப்போது சட்டத்தின் பிடியில் இருந்தாலும்.....
எதிர்காலத்தில் தப்பித்து போனாலும்....

..
தங்கள் மகனின் வருகைக்காய்
ஏங்கும் பெற்றோருக்கும்...
சகோதரனின் வருகைக்காய்
ஏங்கும் உடன்பிறப்புக்களுக்கும்...

அவனின் அன்பிற்காக ஏங்கும்
உறவுகளுக்கும்.....
உண்மையான நண்பர்களுக்கும்....

அவர்கள் கொடுக்க போவது என்ன.....????
நண்பனின் உயிரா....?
இல்லை தங்களது உயிரையா....?

27.03.2010
யாரோ ஒருவன்

வந்து தன் கோரத்தை காட்டிப்போன கொடிய அந்த நிசாவின் கோரம் மறையாது என்றும்..... பெருங்குளம், கச்சாய் மீசாலை வீதிகளில் பயணிக்கும் பொது கண்ட அனுபவங்கள். November -2008



காலமழை காலம் தாழ்த்தி
போட்டிருந்த வீதித்தடை
அகற்றியது போல்
கட்டவிழ்த்து வந்தான்....!!

கட்டிலில் கிடந்தோர் எல்லாம்
கடல் நீரில் மிதக்க அவன்
தன் இடக்காலை வாசல்வழி
மெல்ல வைத்தான்....!!
கால் வைத்த அவனுக்கோ
ஆலத்தி எடுக்க ஆள் தேடி
அறைக்குள்ளும் போய் விட்டான்

உறவாடி களைத்து தான்
அவன் சமையல் பக்கம்
உயர்ந்து போனான்...
பானைகள் நீந்தி முத்தம் வர...
பனைகளும் வீட்டை முத்தமிட்டன
பதநீர் குடித்த அவனுக்கு
மயக்கம் வரத்தான் போகும்
இடம் எங்கும் மரங்களையும்
அழைத்தான் துணையாக...!!

இராணுவம் ஆக்கிரமிக்காத
இடங்களையும் இவன் ஆக்கிரமித்து
வீடுகளை கைப்பற்றி முகாம்களுக்கும்
படை எடுத்தான்...
துன்பத்தால் துன்பப்பட்டவனை
துன்பத்தில் முழ்கடிக்க அவன்
வயலையும் சமுத்திரமாக்கி
அலையினை அடித்து
குழந்தையை பிடித்தான்
தன் கோரப்பிடியில்...!!

மேசையின் மேலே நாய்களை விடும்
மனிதரும்... பசு மாடுகளை
தண்ணிரில் தவிக்கவிடும்
மடயரும்.... எங்கு தான் உள்ளார்கள்...
வேறெங்கும் இல்லை...

ஆடுகள் முக்குளிக்க பூனைகள்
இறந்துவிடும்... ஜயோ பாவம்
கோழிகள் தான் என்ன செய்யும்...

தமிழ் நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home