நகைகள் அழகுக்கு அணியும் காலம் போய்.... ஆடம்பரமாகி விட்டன.. குறைத்தால் அழகு.. கூட்டினால் ஆபத்து..

யார் பாத்தாலும் எனை
பிடிக்கும் - என்னை
யார் பாத்தாலும் எனக்கு
பிடிக்கும்...!!
திருவிழாவில் எனை கண்டால்
சிலருக்கு கையரிக்கும்...
தரையினில் எனை கண்டால்
பலருக்கு கண்கூசும்....!!
பூட்டி வைத்தாலும் என்றும்
என் பெருமை குறையாது...
சேற்றில் போட்டாலும்
என் அழகு குறையாது....!!
நான் நிறைந்து போனால் - உன்
உயிருக்கு எமனாவேன்....
எனை குறைத்துப் போட்டால் - உன்
அழகுக்கு உரமாவேன்.....!!
தமிழ் நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா