Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள் ஊரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று.


ன்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!

கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...

யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...

தமிழ்நிலா 


காதல் காதலாக இல்லை, திருமணமான பின்னும் காதல். அது வேறு பெண்ணுடன். மணமாக முன்னும் காதல். சிறு வயதில் தாயாகும் பெண்கள்.. தற்கொலை செய்யும் பெற்றோர்... பல்வேறு நிகழ்வுகளால் எழுதிய உளறல்....





தாஜ் மகாலால் காதல் வாழ்கிறது
இங்கு காதலோ காமத்தில்
ஏரிகின்றது..... 


இது ஏன் ....???
இது காதலில் குளிர் காய்தலோ...!!

ஒழுங்கைக்கு ஒழுங்கை கட்டப்படுகிறது
நவீன தாஜ்  மகால்கள்.. இன்றய எம்
சாஐகான்களால்... 


இது ஏன் ....??
காதலின் நினைவுக்கோ....!!

காதலுக்கும் ஓராடாண்டாம் - அவர் தம்
குழந்தைக்கும் ஓராண்டாம்.. இது 
ஏன்ன மாயம்.... 


இது ஏன் ..??
காதலின் வேகமோ....??

முப்பது வயதாகியும் கன்னிகளாய்
பல பெண்கள்... பதினைந்து வயதிலே
கற்பிணிகளாய் சில பெண்கள்..


இது ஏன்....??
காதலின் சூதோ...??

கழுத்தில் தாலி இல்லை
வயித்தில் பிள்ளையாம்... 
இருக்கவீடில்லை.. 
அப்பனையே தெரியாமல்
பிறந்துதாம் பெண் பிள்ளை....!!

பள்ளிக்காதல், படலைக் காதல், 
சந்திக் காதல், சந்தித்த காதல்
கள்ள காதல், செல்லில் காதல் எல்லாம்
வர நம் நல்ல காதல் என்னாவது.....??

தமிழ்நிலா 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home