Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
பாடசாலை எங்கும் ஆசிரியர் தினம் கொண்டாட பட்டாலும் ஆசிரியர்களுக்குரிய மதிப்பை கொடுப்பதில்லை... அவர்களது பணியை உணர்வதில்லை


லகத்தில் பல தினம் இருக்கு 
உமக்கும் ஒரு தினம் இருக்கு,
அன் நாளில், தரணியில் புகழ் சேர்க்க 
எமக்கு ஒளி ஊட்டும் இறைவா உமக்கு 
மலர் சூடுகிறோம் உம் குழந்தைகளாக....!

தினம் தினம் நீர் விளித்து 
எமை உயர வைத்தாய்... 
உறக்கம் ஏதும் இன்றி 
எமை மேலே ஏறிவிட்டீர்...!

நீர் ஏறிய ஏணியில் எமை ஏற்ற
பல முறை விழுந்துவிட்டீர்...!
உம் காலில் நாம் விழுவதற்கு
இன் நாள் ஒன்று போதாது குருவே..!

நாளும் நீர் கூறும் அறிவுரை புளிக்கும் எமக்கு... 
அது நம் வயது... எம் வெற்றியின் மறுகணமே 
இனிக்கும் அவையே தேனாக... அது தான் எம் மனது..!

யார் யாரோ கல்லில் காணும் கருணையை
உம் உளத்தில் காணுகிறோம்...
பூமிக்கு வந்த தெய்வங்கள் நீங்களே....
நீங்கள் தேய்ந்து எமை வளர்த்திர்கள்...
வளர்ந்தோம் உம்மையே திரியாய் கொண்டு....
நீர் ஏற்றிய தீபம் என்றும் அணையாது... 
உமை மறந்து எம் இதயம் ஒருநாளும் போகாது....!

உமை வாழ்த்த உயிர் உள்ள 
சொற்கள் இன்றி தவிக்கின்றோம்....! 
உங்கள் சந்தோசத்தை பார்த்து  நாம் 
ஊமையாகி போகின்றோம்...

தமிழ் நிலா 
மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010
Next PostNewer Posts Previous PostOlder Posts Home