Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ஒரு கைதியின் டைரியில் இருந்து..

Leave a Comment


கடத்தப்பட்டு, காணாமல் போய் கைது செய்யப்பட்ட, சிறைகளிலும் தடுப்பு முகாங்களிலும் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் விடுதலை என்று அறிவிக்கப்பட்ட மகிழ்சியில்...




என் பாசமுள்ள அம்மாவுக்கு
ஒரு பாச மடல்.......
அம்மா நலமா?

யாழ்ப்பாணம் பார்த்து
ஐயிரண்டு வருடம் அம்மா...!!
இங்கு வரும் பேப்பர் எலாம்
யாழ் செய்தி சொல்லும் அம்மா ... ??

தமிழினத்தை கொல்றாங்களாம்
தினம் தினம் சொல்லுறாங்கள்..
இப்பவும் நடக்குதாம்மா...
தமிழனுக்கு உரிமை கிடைச்சுதாம்மா???

A9 ம் திறந்தாச்சாம்
யாழ் தேவியும் வரப்போதாம்.....!!
யாழ்ப்பாணம் நான் வர
நீ இருக்கணும் எனக்காக.....
காணமல் போன உன் மகன்
உயிரோடு உள்ளேன் அம்மா......!!

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்தி விட்டாய்...
நாற்பது வயதுக்கு மேல் ஆகி இருக்கும்
என் அம்மா உனக்கு....

நீ பெத்த மகளுக்கு - இந்த
அண்ணனை நினைவிருக்க ..??
என் பெயர் சொல்வதுண்டா....???
அவள் கல்யாணத்துக்கு எனும்
வருவேனா சொல் அம்மா...??

கடத்தப்பட்ட காரணம் தெரியாமலே...
கடந்ததமா பத்து வருஷம்....
ஒவொரு நாளும் விடியும் போது
எங்களுக்கு விடியாத என்று
இருக்குதம்மா...!!!

பத்து வருசத்தில் எத்தனையோ
நண்பர் அம்மா...!!
வருவதும் போவதும்...
அன்றாட வழக்கம் அம்மா...!!!

போனவர்கள் இங்கு என்று
யாருக்கும் தெரியாதம்மா...!!
யாரேனும் வந்து என் செய்தி
சொன்னதுண்டா..????

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்திடம்மா...
நிச்சயம் ஒரு நாள் வருவேன்
அரசியல் கைதிகளுக்கு மறுவாழ்வாம்....!!

தமிழ்நிலா

காற்றுவெளி October 2010 
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா