Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காதலர் தினம் பற்றி

4 comments

காதலர் தினம் நெருங்கிவிட்டது. காதலர்கள் படு பிஸி யாக இருக்கிறார்கள். இருந்தாலும். இந்த காதலர் தினம் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் தான். நண்பன் ஒருவன் கேட்டான். அதற்காக ஆராய்ந்தபொழுது ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

அது உங்களுக்காக....

"கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். 

இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் (Valentine) நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம். பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

எப்படியெனினும், வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக ஆரம்பித்தது கவனிக்கத் தக்கது.

சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்த காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது. பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக ஊர்ஜிதமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது. காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 24ம் தியதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள்.  அதாவது பிப்ரவரி 14ம் தியதி பரிசு வாங்கியவர்கள் மார்ச் 14ம் தியதி பதில் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம்.  கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்த பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம்.

தென்கொரியாவில் நவம்பர் 11ம் தியதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் (ஆகஸ்ட் கடைசி பகுதி) காதலர் விழா கொண்டாடப் படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காணும் வேலை ஆண்களுக்கு.

பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் பன்னிரண்டாம் தியதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது.

கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.  அமீகோ சீக்ரட்டினோ - எனப்படும் ரகசிய ஸ்நேகிதனே விழாவும் அங்கே பிரபலம். பின்லாந்தில் நண்பர்கள் தினமாக இது கொண்டாடப்படுவதால் காதலுக்கு உரிய முக்கியத்துவம் இந்த விழாவிற்கு இல்லை.  ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்த்து அட்டை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்."

இது காதலர் தினம் பற்றி உங்களுக்கான அறிமுகம்...

இன்னும் ஒரு விடையத்தை பார்ப்போம்...

காதலின் சின்னம் தாஜ் மஹால், தாஜ் மஹால் யாருக்காக..?? தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்... பா விஜய் இன் பதிவு ஒன்றில் பார்த்தேன்.

"காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ்ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்

மும்தாஜின் பிரிவை தாங்க முடியாத ஷாஜகான் அவள் நினைவாக ஒரு சின்னத்தை கட்ட நினைத்தான். அதற்காக தனது ஆஸ்தான கட்டட வடிவமைப்பாளனை அழைத்து அவனிடம் விருப்பத்தை கூறினான். ஆனால் தயவாக இல்லை மிகவும் கடுமையாக கூறினான். அதாவது உலகத்திலேயே இல்லாத அளவுக்கு அதிசயமாகவும் அழகாகவும் அமைய வேண்டும் இல்லாவிடில் உன்னை கொன்று விடுவேன் என்றானாம். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அதைப் பற்றியே சிந்தித்த படி அலைந்தான் சாப்பாடில்லை, தூக்கமில்லை பைத்தியம் போல் அலைந்தான்.

இதை அவனது காதலியான திலோத்தமி கண்ணுற்றாள். தன் காதலன் ஒடிந்து போன காரணத்தை கேட்டாள் அவனும் விசயத்தை கூறினான். அதற்கவள் தானே உதவுவதாக கூறி அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றாள். அவனை தான் செய்யப் போவதை அப்படியே பார்க்குமாறு கூறி விட்டு அருகே உள்ள மலைக் குன்றொன்றில் மீது ஏறினாள். தன் காதலனின் உயிர் மீது தீராத காதல் கொண்ட அவள் கூறினாள். “நீ நல்லாயிருக்கணும் அதற்காக ஒரு சிறந்த கட்டடத்தை வடிவமைக்கணும் அந்த வலியை உனக்காக நான் தருகிறேன்” எனக் கூறிக் கொண்டு மேலே இருந்து கிழே விழுந்தாள். ஷாஜகான் வேற்று ஊரில் இருக்கும் போது இறந்த மும்தாஜ்ஜின் மேல் இந்தளவு துக்கம் கொண்டிருந்தான் என்றால் தன் கண் முன்னே காதலியை இழந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும். அவனது அந்த வலியின் சின்னம் தான் இந்த தாஜ்மகால்...

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா